டிச.20-இல் வேலைவாய்ப்பு முகாம்
கரூர், டிச.16 - கரூர் மாவட்டத்தில் டிச.20 அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. L&T shipping Limited நிறுவனத்தில் ஐடிஐ பயின்றவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படும். 8 ஆம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை பங்கேற்க லாம் என மாவட்ட ஆட்சியர் தங்க வேல் தெரிவித்துள்ளார். டிச.19-இல் ஆய்வு கூட்டம் தஞ்சாவூர், டிச.16 - சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் தலைமை யில் டிசம்பர் 19 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரி வித்துள்ளார்.
பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைவு
மதுரை, டிச. 16- பனிப்பொழிவு காரணமாக பூக்களின் உற்பத்தி பெரு மளவு குறைந்துள்ளது. இதனால் மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது. குறிப்பாக, மதுரை மல்லி கிலோ ரூ.2,500, மெட்ராஸ் மல்லி ரூ.700, பிச்சி ரூ.1000, முல்லை ரூ.800, செவ்வந்தி ரூ.180, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.100, கனகாம்பரம் ரூ.1,000, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.300, கோழிக்கொண்டை ரூ.120, அரளி ரூ.600, தாமரை (ஒன்றுக்கு) ரூ.25 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் இதனை தெரி வித்துள்ளார்.
பள்ளி விடுதி மாணவி பலியான சம்பவம் சிபிஐ குற்றப் பத்திரிகையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை
மதுரை, டிச.16- தஞ்சை மைக்கேல்பட்டியில் தனி யார் கிறிஸ்தவ பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி உயிரிழந்த விவ காரத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்ய உயர்நீதி மன்ற மதுரை கிளை மறுத்து, மனுவை யும் தள்ளுபடி செய்துள்ளது. தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல் பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளி விடுதி யில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை, செய்து கொண்டார். மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற் றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக, அந்த பள்ளியின் நிர்வாகி சகாயமேரியை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் சகாயமேரி மனு தாக் கல் செய்திருந்தார். அதில், “மாணவி லாவண்யா உயிரி ழப்பிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை, மதம் மாற கோரி யாரும் வற்புறுத்தவில்லை. எனவே இந்த வழக்கில், என் மீது விசாரணை நீதி மன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற் றப்பத்திரிகையை ரத்து செய்து உத்த ரவிட வேண்டும்” என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகைதீன் பாஷா ஆஜராகி இந்த வழக் கில் சிபிஐ விசாரணை மிக சரியான முறையில் நடத்தப்பட்டுள்ளது. விடுதி யில் மதமாற்றம் செய்வதற்கான முகாந் திரம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் விடுதியில் இருந்து போதிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த மாணவி 10 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார். ஆனால் 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்த தால் மன அழுத்தத்துடன் காணப் பட்டுள்ளார். இதற்கு காரணம் சர்ச் நிர்வாக கணக்குகளை மாணவி எழுத வற்புறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெண் குழந்தைகள் உள்ள விடுதியில் அதிக விஷ தன்மை கொண்ட பூச்சி மருந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் நான்கு மரண வாக்கு மூலங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட் டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டார். விசாரணை முடித்து இந்த வழக்கு தீர்ப்புக்காக நீதிபதி ஒத்தி வைத்திருந்த நிலையில், திங்களன்று தீர்ப்பு வழங் கிய நீதிபதி இளங்கோவன், சிபிஐ குற் றப்பத்திரிகை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
கல்லூரியில் பெண் முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை எவ்வாறு இருக்கும்?
பாலியல் அச்சுறுத்தல் வழக்கில் நீதிபதி கேள்வி மதுரை, டிச.16- மதுரை கல்வியியல் கல்லூரி பெண் முதல்வருக்கு பாலியல் அச்சுறுத்தல் கொடுத்த பல்கலைக்கழக முன்னாள் பதி வாளர் மீது பதியப்பட்ட வழக்கை சிறப்பு விசாரணை பிரிவுக்கு மாற்ற உத்தரவிட கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நீதி மன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்துள்ள நிலையில், அவர் மீது ஏன் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு கல்லூரியில் பெண் முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை எவ்வாறு இருக் கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையைச் சேர்ந்த கல்லூரி பெண் முதல்வர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் பதிவாளர் ராம கிருஷ்ணன் மீது பாலியல் அச்சுறுத்தல் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது. கல்லூரி முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கல்லூரியின் பெண் முதல்வருக்கு இது போன்ற பாலியல் அச்சு றுத்தல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு நீதி மன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்தும் உள் ளது. ஆனால் இதுவரை பதிவாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த வழக்கை வேறு விசாரணை பிரிவுக்கு மாற்ற வேண்டுமென வாதிட்டார். அப்பொழுது நீதிபதி வழக்குப் பதிவு செய்து பல மாதங்கள் ஆகிறது. குற்றம் சாட்டப்பட்ட பதிவாளருக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றமும் மறுத்துவிட்டது. ஆனால் இதுவரை அவர் மீது ஏன் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஒரு கல்லூரியின் பெண் முதல்வ ருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்க ளின் நிலை எவ்வாறு இருக்கும் என கருத்து தெரிவித்து இந்த வழக்கில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்த ரவு பிறப்பித்துள்ளார்.
கந்துவட்டி மூலம் கல்வி நிலையம் ஆக்கிரமிப்பு
குற்ற வழக்குப் பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
திருவாரூர், டிச.16 - மன்னார்குடி பகுதியில் கந்து வட்டி பிரச்சனையில் நீண்ட போராட் டத்துக்கு பின் குற்ற வழக்காக பதிவு செய்து வழக்கு விசாரணை துவங்கி இருப்பது இந்தப் பகுதி மக்கள் பரபரப்பாக பேசும் பொருளாக அமைந்துள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார் குடி காமாட்சி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் அன்பழகன். இவர் 1998 ஆம் ஆண்டு முதல் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி என்ற பெயரில், மன்னார்குடி பைபாஸ் சாலையில் எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளி நடத்தி வருகிறார். தொடர்ந்து, 31-4-2001 ஆம் ஆண்டு முதல் பாரதிதாசன் எஜு கேஷன் கல்ச்சுரல் சோசியல் வெல்ஃபர் டிரஸ்ட் என்ற டிரஸ்டை தன்னுடைய தாயார் மற்றும் மனைவி, மைத்துனர் ஆகி யோரை டிரஸ்டி உறுப்பினர்களாக கொண்டு 2005 ஆம் ஆண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை துவங்கி மேல்நிலைப் பள்ளியாக செயல்படுகிறது. கடனில் சிக்கிய கல்வி நிலையம் இப்பள்ளியை விரிவுபடுத்த 55,000 சதுர அடியில் ஆர்சிசி தளத்தில் 60 வகுப்பறைகள், மேலும் 50,000 சதுர அடியில் விளையாட்டு திடல் அமைத்தும், மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதி யில் இருந்து 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்வதற்காக 10-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் வாங்குவ தற்கு உறவினர்கள் மற்றும் ரிலை யன்ஸ் நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளார். பொதுத் தேர்வில் மாவட்டத் தில் முதலிடமும், மாநிலத்தில் இரண்டாம் இடமும், நான்கு முறை இளம் விஞ்ஞானி விருதும் பெற்ற பள்ளியாக செயல்பட்டு வந்த நிலையில், 2016 ஜனவரி மாதம் மாசிலாமணி என்பவர் மூலம் பால சுப்பிரமணியன் அன்பழகனுக்கு அறிமுகமானார். அப்போது, 2016 ஆம் ஆண்டு ரூ.3 கோடியும், 2017 ஆம் ஆண்டு ரூ.3 கோடியும், மேலும் ரூ.25 லட்சமும் கூடுத லாக ரூ.6.25 கோடியும் கடனாக பெற்றார் அன்பழகன். டிரஸ்டிகளை வெளியேற்றி பள்ளி கைப்பற்றல் இந்நிலையில் கடன் பெறும் போது ஒரு பைசா வட்டி எனவும், கடன் கொடுத்த பிறகு 3 பைசா வட்டி எனவும் கூறியதால், அதிர்ச்சியடைந்த அன்பழகன், கடன் கொடுத்த பாலசுப்பிர மணியனிடம் இதுகுறித்து கேட்ட போது, இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. தொடர்ந்து இது கந்து வட்டி பிரச்சனையாக உருவெ டுத்தது. பின்னர், கடன் கொடுத்த பாலசுப்பிரமணியன் பட்டுக் கோட்டை லாரல் மெட்ரிகுலே ஷன் பள்ளியின் தாளாளர் என தெரிந்தது. பாலசுப்பிரமணியன், அவரது மகன்கள் ஜெயக்குமார், சந்திர சேகரன் ஆகிய மூவரும் சேர்ந்து பாரதிதாசன் எஜுகேஷன் கல்சுரல் டிரஸ்டிகளாக ஆக்கப் பட்டனர். பின்னர் ஏற்கனவே தாளா ளராகவும் டிரஸ்ட் உறுப்பினர் களாகவும் இருந்தவர்களை மிரட்டி வெளியேற்றி விரட்டி விட்ட னர். இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள மாசிலாமணி வீட்டில், அன்பழகனை அடைத்து வைத்து மிரட்டி 15.7.2018 ஆம் ஆண்டு பள்ளியை பாலசுப்பிரமணியன் கைப்பற்றி, ரூ.20.30 கோடிக்கு விற்பனை செய்ய ஒப்புக் கொண் டதாக மிரட்டி கையெழுத்துப் பெற்றனர். 4 ஆண்டு சட்டப் போராட்டம் இதைத் தொடர்ந்து பாரதி தாசன் பள்ளியை நிர்வகித்து வந்த தாளாளர் அன்பழகன் வெளி யேற்றப் பட்டதால், மன்னார்குடி நகர காவல்துறையிடம் புகார் கொடுத்தார். ஆனால், காவல் துறை நடவடிக்கை எடுக்காததால், நான்கு ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில், மன்னார்குடி குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதி மன்ற எண்.1 நீதிபதி, திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டதன்பேரில், தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மன்னார்குடி பாரதிதாசன் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளா ளரை, மோசடி செய்து ஏமாற்றிய பட்டுக்கோட்டை லாரல் மெட்ரிக் பள்ளி தாளாளர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தெரிவிக்கை யில், “எதிர்தரப்பு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீண்ட கால மாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் தற்போது குற்ற வழக் காக பதியப்பட்டு விசாரணை துவங்கி உள்ளது வரவேற்கத் தக்கது. இதேபோல் மாவட்டம் முழுவதும் கந்து வட்டி பிரச்சனை உள்ளது. காவல்துறை உரிய வகையில் விசாரணை நடத்தி, கந்து வட்டித் தொழிலில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.