districts

ஆவின் கொள்முதல் அளவை ஒரு லட்சம் லிட்டராக உயர்த்த கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஏப்.17 - பசும் பால் லிட்டருக்கு ரூ.42, எருமைப் பால் லிட்ட ருக்கு ரூ.51 என விலையை உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும். ஆவின் கொள்முதல் அளவை ஒரு லட்சம் லிட்டராக உயர்த்த வேண்டும். கொள்முதல் செய்த  பாலுக்கான தொகையை உடனே வழங்க வேண்டும். ஆரம்ப சங்கங்களில் பால் வாங்கும் இடத்திலேயே அளவு, சத்து, பால் விலையை குறித்து கொடுக்க வேண்டும். கால்நடைத் தீவனங்களை 50 சதவீதம் மானி யத்தில் வழங்க வேண்டும்.  குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலை  சேர்த்து வழங்க வேண்டும். கறவை மாடுகளுக்கு வருடத் திற்கு இரண்டு முறை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால்  உற்பத்தியாளர் சங்கம் சார்பில் மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்க  மாநில பொருளாளர் சங்கர், மாவட்ட செயலாளர் ராமநா தன், மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் பேசி னர்.