மயிலாடுதுறை, மே 31 - மீன்களை சுத்தப்படுத்தி தரும் வேலை செய்து மகளை ரஷ்ய நாட்டிற்கு அனுப்பி மருத்து வம் படிக்க வைத்து சாதித்த தாயை தமிழக முதல்வர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் மற்றும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய செவ்வாயன்று வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருக்கடையூர் தமிழ்நாடு ஓட்டலில் மயிலாடுதுறை ரமணி மற்றும் அவரது மகளான மருத்துவர் விஜய லெட்சுமி, அவரது சகோதரர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் டவுன் எக்ஸ்டென் சன் பகுதியில் வசிப்பவர் ரமணி. இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். வயதான தாய் தையல்நாயகி யும் உடன் வசித்து வருகிறார். 24 ஆண்டுக ளுக்கு முன்பு விஜயலட்சுமி 11 மாத கைக் குழந் தையாக இருந்தபோது ரமணியின் கணவர் ராஜேந்திரன் உயிரிழந்தார். உறவினர்கள் ஆதரவு இல்லாததால் தன் தாய் தையல்நாயகியையும், கைக் குழந்தைக ளையும் காப்பாற்ற மயிலாடுதுறை மீன் மார்க்கெட் டில் தினந்தோறும் மீன்களை வெட்டி கழுவி சுத்தம் செய்து தரும் வேலைக்கு சென்றார். மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குபவர்கள் தரும் மீன்களை உரசி செதில்கள் நீக்கி அதை துண்டு துண்டாக வெட்டி சுத்தம் செய்து, ரூ.20 முதல் ரூ.50 வரை மீன் வாங்குபவர்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மூத்த மகன் ரவிச்சந்திரன் ரத்த நாள சுரப்பி குறைபாடு ஏற்பட்டு மருத்துவத் தால் சரி செய்ய முடியாத நோயினால் பாதிக்கப்பட் டார். இதன் காரணமாக இவர் ஆயுள் முழுவதும் மருந்து-மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்ததால், பத்தாம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர முடியாமல் தற்போது வீட்டி லேயே இருக்கிறார். இவருக்கு மருந்து மாத்திரைகளுக்கு ஆயிரக் கணக்கில் செலவு செய்து வந்த நிலையில், மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த தன் மகள் விஜய லட்சுமியை வறுமையின் காரணமாக மெக்கானிக் கல் இன்ஜினியரிங்கில் சேர்த்தார் ரமணி. இருந்தா லும் மகளின் ஆசையை நிறைவேற்ற நினைத்த ரமணி, தனது சொந்த வீடு மற்றும் நகைகளை விற்று வாடகை வீட்டில் குடியிருந்துகொண்டு மகளை ரஷ்யாவிற்கு அனுப்பி மருத்துவம் படிக்க வைத்தார். தற்போது ரஷ்யாவில் படித்து முடித்து மருத்து வராய் திரும்பியுள்ள மகள் விஜயலட்சுமி, இந்தி யாவில் மருத்துவராக பணியாற்ற வேண்டிய அங்கீகார தேர்வு எழுதுவதற்காக தீவிரமாக படித்து வருகிறார். சொத்துகளை இழந்தாலும், தன் மகளுக்கு கொடுக்க வேண்டிய கல்வி செல் வத்தை முழுமையாக கொடுத்த திருப்தி தாய் ரமணியின் கண்களில் தெரிகிறது. தற்போதும் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்யும் பணியில் ரமணி ஈடுபட்டு வருகிறார். தாயின் கனவு மற்றும் மருத்துவர் கனவை நிறைவேற்றுவ தற்காக அங்கீகாரத் தேர்வு எழுதவுள்ள விஜய லெட்சுமி வெற்றி பெற வேண்டும் என்பதே அனை வரின் விருப்பமாக உள்ளது. மீன் சுத்தம் செய்யும் வேலை செய்து மகளை மருத்துவராக்கிய ரமணியின் கடின உழைப்பு குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், ரமணி மற்றும் மருத்துவர் விஜயலெட்சுமிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்ட நிலை யில், செவ்வாயன்று ஆய்வு பணிகளுக்கிடையே மருத்துவர் விஜயலெட்சுமி அவரது தாயார் ரம ணியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது குறிப் பிடத்தக்கது.