districts

img

மணமேல்குடி தமுஎகச வின் ஐம்பெரும் விழா

புதுக்கோட்டை, ஜூலை 2-

     தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மணமேல்குடி கிளையின் சார்பில் ஐம்பெ ரும் விழா நடைபெற்றது.  

    அரசுப் பள்ளியில் படித்து  10, 12 ஆம் வகுப்பு களில் சிறப்பிடம் பெற்ற வர்களுக்குப் பாராட்டு, மாவட்ட அளவில் சிறந்த  அரசுப் பள்ளியாக தேர்வு பெற்ற மேலஸ்தானம் நடு நிலைப் பள்ளிக்கு பாராட்டு,  நூறு விழுக்காடு தேர்ச்சி  பெற்ற அரசுப் பள்ளிகளுக் குப் பாராட்டு, பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு, சமூக சேவை  மற்றும் தனித் திறனாய்வா ளர்களுக்குப் பாராட்டு என  ஐம்பெரும் விழாவை தமிழ் நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின்  மணமேல்குடி கிளை நடத்தி யது.

   விழாவிற்கு கிளைத் தலைவர் இந்தியன் கணே சன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா நடேசன், வர்த்தக சங்கத் தலைவர் மா.கணே சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைப் பெருந்தலைவர் எஸ்.எம்.சீனியார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். விழா வில் ‘தமிழ் செம்மல்’ கவிஞர்  தங்கம்மூர்த்தி சிறப்புரை யாற்றினார். முன்னதாக மு. ராஜமாணிக்கம் வரவேற்க, பெ.திருமுகம் நன்றி கூறி னார்.

;