districts

img

ஆபத்தை ஏற்படுத்தக் காத்திருக்கும் பழுதான மின் மாற்றிகள்

கரூர், ஜூலை 5 -  பழுதடைந்த மின் மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு மென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் கே.கந்தசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:  கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றி யம் சின்னதாராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.வெங்கடாபுரம் செல்லும் சாலையில் இருந்து, சின்னபுளியம்பட்டி செல்லும் இணைப்புச் சாலையில் குசவன்கோயில் களம் என்ற இடத்தில்  மின் பகிர்மான மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) உள்ளது. இந்த மின்  மாற்றியை தாங்கி நிற்கும் இரண்டு சிமெண்ட் மின் கம்பத்தின் தூண்களி லும், சிமெண்ட் கற்கள் கீழே விழுந்து  இரும்பு கம்பிகள் வெளியே தெரி கின்றன. இந்த கம்பங்கள் எப்போது வேண்டு மானாலும் கீழே விழுந்து விடும் நிலை யில் உள்ளன. இதனால் விபத்து ஏற்படும் முன், உடனடியாக புதிய மின்  கம்பங்கள் அமைக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் உள்ள சிமெண்ட் மின் கம்பங்களிலும், சிமெண்ட்  கற்கள் பெயர்ந்து, கம்பிகளுடன் எலும் புக்கூடுகள் போல காட்சி அளிக்கிறது.  இப்படி உயிருக்கு அச்சம் விளைவிக்க கூடிய மின் கம்பங்களையும், மின்  மாற்றிகளையும் உடனே மாற்றிய மைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம், கரூர் மாவட்ட மின்வாரிய நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும். சாலை வசதி வேண்டும்  டி.வெங்கடாபுரத்திலிருந்து சின்ன புளியம்பட்டி வரை செல்லும் இணைப்புச் சாலை பொதுமக்கள் நடந்துகூட செல்ல முடியாமல் மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. பொது மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் நலன் கருதி சிதிலமடைந்து உள்ள சாலைக்குப் பதில், புதிய தார்ச் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.