districts

img

கணவரை இழந்த பெண்ணுக்கு வீடு கட்ட நிதி ஒதுக்கிய ஆட்சியர்

தஞ்சாவூர், மே 20-

     தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவ ரது மனைவி சந்தியா (43). இவர்களுக்கு  அனுப்பிரியா (13), அன்பு (12) என்ற குழந்தைகள் உள்ளனர்.  இருதயராஜ் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு இறந்து விட்டார். இத னால் இரண்டு குழந்தைகளுடன் இனி  எப்படி வாழ்வேன். போதிய வருமான மும் கிடையாது. என்ன செய்ய போ கிறேன் என சந்தியா புலம்பியுள்ளார். மேலும், வசிக்க வீடு கூட இல்லாத நிலை யில், தனது குழந்தைகளுடன் சாலை யோரத்தில் வசித்தார்.

   இதுகுறித்து சந்தியா, தனது இரண்டு பிள்ளைகளுடன் சமீபத்தில், ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரி டம் நிலைமையை எடுத்துக் கூறி மனு  அளித்தார்.  இந்த மனுவை படித்து பார்த்த ஆட்சி யர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களை அழைத்து மனுவின் தன்மையை கூறி அரசின் நலத்திட்டங்கள் அந்த பெண் ணுக்கு வழங்குவது குறித்து ஆலோசித் தார்.

   பின்னர் உடனே சந்தியாவிற்கு கும்ப கோணம் அசூர் அருகே வீடு கட்ட வீட்டு  மனை பட்டாவும், ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நலத்துறை சார்பில் வீடு  கட்டித்தர நிதியையும் ஒதுக்கீடு செய்தார். மேலும், அவரது குடும்ப சூழ் நிலையை கருத்தில் கொண்டு, ஆட்சி யர் தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.75 ஆயிரத்திற்கான காசோலையையும், தனது சொந்தப் பணத்தில், ரூ.10 ஆயி ரத்தையும் வழங்கினார்.  

    தஞ்சாவூர் ஆட்சியராக உள்ள தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பணி மாறு தல் செய்யப்பட்டு, விரைவில் சென்னை  பத்திரப்பதிவுத்துறை தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்பதும், பணி மாறுதலில் செல்லும் கடைசி நாளிலும் ஏழைப் பெண்ணுக்கு வீடு கட்ட உதவி  செய்ததும் குறிப்பிடத்தக்கது.  

   தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சை ஆட்சியராக கடந்த இரு ஆண்டு களுக்கு முன் பொறுப்பேற்ற, மறுநாளே  குடியிருக்க மனைப்பட்டா வேண்டும் என வாட்ஸ் அப் வாயிலாக வேண்டு கோள் விடுத்த, பேராவூரணி அருகே  பட்டத்தூரணியை சேர்ந்த பெண்ணுக்கு  நேரில் சென்று வீட்டுமனைப் பட்டா வழங் கியதும் குறிப்பிடத்தக்கது.

   இதேபோல், கும்பகோணம் அருகே  உள்ள மாற்றுத்திறனாளியான கணவன்  -மனைவிக்கு வீடு கட்டி தந்து அவர்களது வாழ்க்கையில் புத்தொளியை  ஏற்படுத்தினார். கும்பகோணம் அருகே  உள்ள தேனாம்படுகையில் நீர்நிலை  புறம்போக்கில் குடியிருந்த இருளர் களுக்கு நிரந்தர வீடு கட்டுவதற்கு மருத நல்லூரில் தனியாரிடம் நிலத்தை வாங்கி  61 வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி னார்.

   விளிம்பு நிலையில் உள்ள மக்களின்  குறைகளை கேட்டு தன் அதிகாரத் திற்கு உட்பட்டு என்னவெல்லாம் செய்ய  முடியுமோ அதனை செய்து வருகிறார்.  அத்துடன் அதிகாரி மத்தியிலும் அன்பாய் வேலை வாங்கும் திறமை கொண்டவராக திகழ்கிறார்.