districts

இடிந்து விழும் நிலையில் பாலம் நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்

அய்யம்பேட்டை, ஜூன் 11-

     தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி, பட்டுக்குடி கிராமத்தில் உள்ள  தூரியாறு பாலம் பழுத டைந்து இடியும் நிலையில் உள்ளது. இந்த பாலத்தை இடித்து விட்டு புதி தாக தரமாக பாலம் கட்ட அப் பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.  

   இந்தப் பாலம் கட்டி 45 ஆண்டுகள் ஆகிறது. இந்த பாலத்தின் வழியே லாரிகள், டிராக்டர்கள் சென்று வருகின்றன. பட்டுக்குடி, கூடலூ ரைச் சேர்ந்த கிராம மக்கள் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் இந்தப் பாலத்தின் வழியே சென்று வருகின்றனர்.  விபத்து நேரும் முன் இந்த பாலத்தை இடித்து விட்டு  புதிதாக கட்ட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.