விழுப்புரம், ஜன.3- “சாதி-மத வேறுபாடுகளைக் கடந்து, உழைக் கும் மக்களின் ஒற்றுமைக்காக நாற்பது ஆண்டு களுக்கு மேலாக கம்யூனிஸ்டுகள் போராடி வரும் விழுப்புரம் மண்ணில் இன்று (ஜன.3) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுவது வரலாற்றுச் சிறப்பு மிக்கது” என மாநாட்டு வரவேற்புக்குழுத் தலை வர் ஆர். ராமமூர்த்தி தமது வரவேற்புரையில் உணர்ச்சி பொங்கப் பேசினார். சங்ககால மன்னன் மலையமான் திரு முடிக்காரியின் ஆட்சிப் பகுதியாக விளங்கிய இந்நிலப்பரப்பில், கவிஞர் கபிலரின் நினைவு களும், வள்ளல் நல்லியக்கோடனின் கொடைச் சிறப்பும் இன்றளவும் பேசப்படுவதாக குறிப் பிட்ட அவர், செஞ்சிக் கோட்டை, திருவக்கரை யின் 400 ஆண்டு பழைமையான மரக்கல், பல்ல வர்கால குகைக்கோயில், சர்வதேச புகழ் பெற்ற ஆரோவில் என வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் விழுப்புரம் மண்ணில் இருப்ப தைப் பெருமையுடன் எடுத்துரைத்தார். “விடுதலைப் போராட்ட காலத்தில் அஞ்ச லையம்மாள், கி. சுப்பராயலு ரெட்டியார், எஸ்.டி. சின்னச்சாமி ரெட்டியார், சி.என். தண்ட பாணிப்பிள்ளை போன்ற எண்ணற்ற போராளி கள் சிறைக்கொடுமைகளை எதிர்கொண்ட மண் இது. அந்த போராட்ட உணர்வை தொடர்ந்து சுமந்து வரும் மண் இது” எனவும் பெருமிதம் அடைந்தார். விவசாயமே பிரதானத் தொழிலாக உள்ள இம்மாவட்டத்தில், நிலவும் பருவமழை பற்றாக் குறையால் விவசாயிகளும் விவசாயத் தொழி லாளர்களும் படும் துயரங்களை விவரித்த ஆர். ராமமூர்த்தி, உலகமயமாக்கல் கொள்கையால் அரிசி ஆலைகளும் எண்ணெய் ஆலைகளும் மூடப்பட்டு திருமண மண்டபங்களாக மாற் றப்படுவது குறித்து வேதனை தெரிவித்தார். “1980-களின் கொந்தளிப்பான காலகட்டத் தில், சாதிய சக்திகள் தலைதூக்கி நின்ற போதும், பல கட்சிகளின் கொடிகள் இறக்கப்பட்ட போதும், எங்கள் செங்கொடி மட்டும் பட்டொளி வீசி பறந்தது” என்று பெருமையுடன் குறிப் பிட்ட அவர், கொசப்பாடி, காங்கேயனூர் கிரா மங்களில் கோயில் நுழைவுக்காகவும், விழுப்பு ரம் ஆமூரில் தலித் மக்களின் பொதுக்குளம் பயன்படுத்தும் உரிமைக்காகவும் நடத்திய போராட்டங்களில் தோழர்கள் ரத்தம் சிந்தி, சிறை சென்று வென்றெடுத்த வரலாற்றை உணர்ச்சி பொங்க நினைவுகூர்ந்தார். மாவட்டத்தின் முன்னோடித் தோழர்களான எஸ். நடராஜன், என்.ஆர். ராமசாமி, சி. கோவிந்த ராஜன், டி.ஆர். விஸ்வநாதன் உள்ளிட்டோரின் அர்ப்பணிப்பும், கடலூர் குமார், ஆனந்தன், அர சூர் சேட்டு, கண்டமங்கலம் சுரேஷ் ஆகியோ ரின் தியாகமும் கட்சியை உழைக்கும் மக்களின் ஒப்பற்ற இயக்கமாக உயர்த்தியதாக நெகிழ்ச்சி யுடன் பதிவு செய்தார். “சாதி மத வேறுபாடுகளைக் கடந்து, உழைக் கும் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி, அனைவருக்கும் கவுரவமான வாழ்வை உருவாக்க மார்க்சிய வழியில் தொடர்ந்து போராடுவோம்” என்ற உறுதியுடன் தனது வரவேற்புரையை நிறைவு செய்தார் தோழர் ராமமூர்த்தி.