கவிஞர் முடியரசனுக்கு சிலை: தமிழக அரசுக்கு நன்றி
பொன்னமராவதி, ஜூன் 30 - வீறு கவியரசர் முடியரசனாருக்கு சிலை அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரைச் சேர்ந்த தமிழ்ச் செம்மல் விருது பெற்ற நெ. இரா.சந்திரன் தமிழக முதல்வரை பாராட்டி தெரிவிக்கையில், நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக, முதலமைச்சர் தந்த அறிவிப்புகள் இன்பத் தேன் வந்து பாய்ந்ததைப் போல் அமைந்திருந்தது. பகுத்தறிவு கவிஞன் என்று தந்தை பெரியார் அவர்களாலும், திராவிட நாட்டின் வானம்பாடி என்று பேரறிஞர் அண்ணா அவர்களா லும், எனக்குப் பிந்தைய கவிஞன் என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும், கொள்கை மாறாச் சிங்கம், தன்மான குன்றம் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களாலும் போற்றப்பட்ட திராவிட இயக்கக் கவிஞர் வீறுகவி முடியரசனார் அவர்களுக்கு ரூ.50 லட்சம் செலவில் சிவகங்கையில் சிலை அமைக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதேபோல தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ரூ.10 லட்சமும் தங்கப்பதக்கமும் கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான விருதும், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளை செம்மொழி தமிழ் நாள் விழாவாக கொண்டாடுவதும், கரிசல் எழுத்தாளர் கி.ரா. பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதும், ஜனவரி 25 ஆம் நாள் மொழிப் போர்த் தியாகிகள் தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிப்பது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதை மகிழ்வோடு வரவேற்று அவருக்கு வாழ்த்துகளை யும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறோம்” என்றார்.
பொன்னமராவதி தாலுகாவில் 5 கிராம நிர்வாக அலுவலர்கள் பணிமாறுதல்
பொன்னமராவதி, ஜூன் 30 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா வில் 5 கிராம நிர்வாக அலுவலர்களை பணிமாறுதல் செய்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி உத்தரவிட்டுள்ளார். பொன்னமராவதி தாலுகாவில் ‘அ’ பிரிவு கிரா மங்களில் ஓராண்டுக்கு மேல் மற்றும் ‘ஆ’ பிரிவு கிராமங்க ளில் 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, நிர்வாக நலன் கருதி 2024 ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு உள்ளது. இதில் அரசமலை கிராம நிர்வாக அலுவலராக பணி யாற்றிய பாண்டியன் பொன்-மேற்கு வட்டத்திற்கும், ஆல வயலில் பணியாற்றிய பழனிச்சாமி என்ற ரமேஷ் அரச மலைக்கும், பொன்-மேற்கு வட்டத்தில் பணியாற்றிய சண்முகம் மேல மேலநிலைக்கும், மேல மேலநிலையில் பணியாற்றிய பிரியங்கா காரையூருக்கும், காரையூரில் பணியாற்றிய சவுந்தரபாண்டியன் ஆலவயல் வட்டத் திற்கும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லுக்கான ஊக்கத் தொகையை இன்று முதல் உயர்த்தி வழங்குக! பாபநாசம் எம்எல்ஏ வலியுறுத்தல்
பாபநாசம், ஜூன் 30 - நெல்லுக்கான தமிழக அரசு வழங்கும் ஊக்கத் தொகையை ஜூலை 1 ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரி, தமிழக சட்டமன்றத்தில் பாப நாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். நெல்லுக்கு உண்டான ஊக்கத் தொகையை ஜூலை 1 ஆம் தேதி முதல் வழங்க வேண்டும் என்று தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடரில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவ ரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இது தொடர்பாக அவர் ஆற்றிய உரையில், “டெல்டா பகுதியில் மிகக் கடுமையான சவால்களுக்கு மத்தியில் கோடைகாலத்தில் பயிர்களை விளைவித்திருக்கிறார்கள். முதலமைச்சர் அவர்கள் நெல்லுக்கான ஊக்கத்தொகை 1.9.2024 முதல் அமல்படுத்தப்படும் என்று கூறியிருக் கிறார். அதை 1.7.2024 முதல் உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்: ஆட்சியர் தகவல்
தஞ்சாவூர், ஜூன் 30- தமிழ்நாடு முதலமைச்சரால் தாய்த் தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளே “தமிழ்நாடு நாள் விழாவாக” இனி கொண்டாடப் படும் என அறிவிக்கப்பட்டது. இவ்விழாவினை கொண்டாடும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளன. கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 9.7.2024 (செவ்வாய்) அன்று தஞ்சாவூர், மேம்பாலம், அரசு மேல்நிலைப் பள்ளி யில் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு “ஆட்சிமொழி தமிழ்”. பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் 1.குமரித் தந்தை மார்சல் நேசமணி, 2. தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, 3. முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி. பங்கேற்புப் படிவம், போட்டிகள் குறித்த விரிவான விதி முறைகள் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப்படும். இந்த போட்டியில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெறு மாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார்.
திருக்காட்டுப்பள்ளியில் சிபிஎம் உறுப்பினர் ரசீது வழங்கல்
தஞ்சாவூர், ஜூன் 30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பில் திருக் காட்டுப்பள்ளியில் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் விழா மற்றும் அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் வழக்குரைஞர் எம்.கே.சேகர் வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.மெய்யழகன், எம்.பாஸ்கரன், பி.முரு கேசன், பி.பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ் தலைமையில் நடை பெற்ற அமர்வில், ‘கட்சி திட்டம்’ என்ற தலைப்பில் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.கலைச்செல்வி தலைமையில் நடை பெற்ற அமர்வில், ‘கட்சி விரிவாக்கம் மீட்டுருவாக்கம்’ என்ற தலைப்பில், தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் வெ.ஜீவகுமார், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற அமர்வில், ‘எதிர்கால பணிகள்’ என்ற தலைப்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரி சாமி ஆகியோர் பேசினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் டி.ஸ்ரீதர் நன்றி கூறினார்.
செம்பனார்கோவில் பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மணல் குவாரிகளை மூடக் கோரி மனு
மயிலாடுதுறை, ஜூன் 30 - மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றி யம், ஆக்கூர் அருகேயுள்ள கிடங்கல், தலைச்சங்காடு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரி களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்தான நிலை உள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியின் செம்பனார்கோ வில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “நான்கு வழிச்சாலை பணிக்காக கிடங்கல், தலைச்சங்காடு பகுதிகளில் மணல் குவா ரிகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட குவாரிகள் கனிம வளத்துறை அனு மதித்துள்ள அளவையும் தாண்டி அதிகளவில் மணலை எடுப்பதோடு, அதிக ஆழத்தில் மணல் எடுப்பதால் சுரக்கும் நீரை ராட்சத எஞ்சின் மூலம் இரைத்துவிட்டு, தொடர்ந்து மணலை தோண்டி எடுக்கின்றனர். இதனால் சுற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
பழ.நெடுமாறனிடம் திருட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கோரிக்கை
தஞ்சாவூர், ஜூன் 30- தஞ்சாவூர் அருகே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறனிடம் ரொக்கம், கைப்பேசி யைத் திருடிச் சென்ற குற்றவாளிகளைக் காவல் துறையி னர் விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்புத் துணைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் சனிக்கிழமை தெரிவிக்கையில், “தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் ஜூன் 12 அன்று முதல் தங்கியுள்ளார். இவர் ஜூன் 22 அன்று மாலை தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து இவரது சட்டைப் பையில் இருந்த ரூ. 3 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி யைத் திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல் துறையினர் மெத்தனமாக இல்லாமல், விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்ட ஆய்வுக் கூட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 30 - குறுவை சாகுபடி செய்யும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயி லாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஞாயிறன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் திற னாய்வு கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலர் அபூர்வா தலைமையில், வேளாண்மை இயக்குநர் முருகேஷ், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சி யர் பிரதீப் குமார், முன்னிலையில் இந்த திற னாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலர் பேசுகையில், “ஆய்வு கூட்டத்தில் குறுவை நெல் சாகுபடி பரப்பை அதிகரித்தல், நெல் இயந்திர நடவுக்கு மானியம் வழங்குதல், சாகுபடி செய்யப்படும் மிகச் சன்ன நெல் ரகங்கள் பரப்பை அதிகரித்தல், விதை இருப்பு, நுண்ணூட்டக் கலவைகள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் மற்றும் மாற்று பயிர் சாகு படிக்கு தேவையான, விதை இருப்பு, நுண் ணூட்டக் கலவைகள், நுண்ணுயிர் உரங்கள் ஆகியன குறித்து விரிவான ஆய்வு செய்யப் பட்டு விநியோகத்தை பருவத்தே விரைந்து முடித்து அடுத்த சம்பா சாகுபடிக்கு தயாராக வேண்டும். முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் பசுந்தாள் உரப் பயிர் சாகுபடி விதை விநியோ கத்தை தொகுப்பாக விரைவில் விநியோகிக் குமாறும், பாரம்பரிய நெல் ரகமான சீவன் சம்பாவினை அதிகளவில் சாகுபடி செய்ய முயற்சி எடுக்கவும், பயிர்களில் எவ்வித பூச்சி நோய் தாக்காமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பயிர் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்கள் அனைத்து விவசாயி களுக்கும் சென்றடைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சென்னையில் உள்ள வேளாண்மை இயக்குநர் குறுவை சாகுபடி திட்டத்திற்கான பயனாளிகளை உடனடியாக தேர்வு செய்தி டவும், தேர்வு செய்யப்பட்ட பயனாளி களுக்கு இடுபொருட்களை வழங்கிட வேண்டும்” என்றார். வேளாண்மை பொறியியல் துறை தலை மைப் பொறியாளர் முருகேசன், டெல்டா மாவட்டங்களின் வேளாண்மை இணை இயக்குநர்கள், வேளாண்மை துணை இயக்குநர்கள், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்கள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.