கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்று. இந்தச் சாலை கடந்த கும்பகோணம் மகாமகத்திற்கு முன்னர் போடப்பட்டது. தற்போது புதிதாக சாலை போடும் பணி நடந்து வருகிறது. இது முழுமை பெறாத நிலையில், பாபநாசம் 108 சிவாலயம் அருகே சாலை ஆங்காங்கே பெயர்ந்து வாகன ஓட்டிகளை சிரமப்படுத்துகிறது. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்துமா?