தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம ஒன்றியம் பட்டீஸ்வரம் ஊராட்சியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் ஜன.13 அன்று தமிழறிஞர்கள் திருக்கோயிலை திறந்து வைத்தனர். மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சு.க.முத்துச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.