districts

img

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை உடனடியாக திறந்திடுக! மேலூரில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை, நவ.28- மதுரை தேசிய கூட்டுறவு சர்க்  கரை ஆலை கடந்த 2019-2020 மற்  றும் 2020- 2021ல் மழை இல்லாத தால் கடுமையான வறட்சி ஏற்பட்டு  கரும்பு பதிவு குறைவாக இருந்த தால் அரவை நிறுத்தப்பட்டது. 2021-2022ல் நல்ல மழை பெய்  தும் போதுமான கரும்பு இருந்தும் மாநில அரசு திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்  தின் சார்பாக பல்வேறு போராட்டங்  கள் நடத்தப்பட்டது. மேலும் 46  நாட்கள் ஆலையின் முன்பு ஆலை யை திறக்கக் கோரி தொடர் காத்தி ருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.  இதன்விளைவாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழக சட்டமன் றத்தில் 2022-2023ல் தேசிய கூட்டு றவு ஆலை திறக்கப்படும் என்று அறி வித்து ஒரு கமிட்டியும் அமைத்தார்.  பின்னர் ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்த அந்த கமிட்டி ஆலை யை திறப்பதற்கு ரூ.27 கோடி செல வாகும் என்று அறிக்கை கொடுத் தது.  திமுகவின் தேர்தல் அறிக்கை யில் அறிவித்தப்படி ஆலையை திறக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஆலை யில் மின் உற்பத்திக்காக ரூ.100 கோடி செலவு செய்து 80 சதவீத பணி முடிந்துள்ளது.  ஒன்றரை லட்சம் பேர் பாதிப்பு தொடர்ச்சியாக போராட்டங் கள் நடத்தி வந்தாலும், ஆலையில் கரும்பு பதிவதற்கு கரும்பு பீல்டு மேன்கள், கரும்பு அதிகாரிகள் போடப்படவில்லை. இது போக இருந்த ஆட்களையும் வேறு ஆலைக்கு அனுப்பிவிட்டனர். அத னால் ஆலைக்கு போதுமான கரும்பு பதியவில்லை. அதனால் கரும்பு பதிவதற்கு உடனே பீல்டு மேன்கள் நியமிக்க வேண்டும். இந்த  ஆலையில் கரும்பு விவசாயிகள் சுமார் 50,000க்கும் மேற்பட்டோரும்,  விவசாய கூலிகள், ஆலை தொழி லாளிகள், லோடுமேன்கள் என சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானமின்றி பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆர்ப்பாட்டம் இந்நிலையில், கரும்பு விவ சாயிகள் மற்றும் ஆலை தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க, சர்க்கரை ஆலையை உடனே  இயக்க தமிழக அரசும் சர்க்கரை துறையும்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு கரும்பு  விவசாயிகள் சங்கம் சார்பில் மேலூ ரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமை வகித்தார். கோரிக்கை களை வலியுறுத்தி கரும்பு விவ சாயிகள் சங்கக் மாவட்டச் செயலா ளர் கரு.கதிரேசன், மாவட்ட துணைச் செயலாளர் பி.எஸ்.ராஜா மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க  தாலுகா செயலாளர் ஏ.ராஜேஸ்வ ரன் ஆகியோர் பேசினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கண்ணன், மேலூர் தாலுகாச் செயலாளர் ஏ. தனசேகரன், சிஐடியு மேலூர் தாலுகா தலைவர் எஸ்.பி.மண வாளன் ஆகியோர்  ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினர். நிறைவு செய்து  வைத்து விவசாயிகள் சங்க மதுரை  மாவட்டச் செயலாளர் எஸ்.பி. இளங்கோவன் பேசினார்.  மாவட்டப் பொருளாளர் வி. அடக்கிவீரணன் நன்றி கூறினார். இதில் கரும்பு விவசாயிகள் கே. கந்தப்பன், பி.சிவநேசன், எஸ்.சீமான், பி.ராமகிருஷ்ணன், எம்.நாகராஜன், பி.பழனியான்(சேகர்), கே.ராமமூர்த்தி, எம்.எஸ்.அய்யங்  காளை, எஸ்.முருகன், மணி, செல்  வம், மகேந்திரன், முருகன் அதி வீரணன் ஆகியோர் உட்பட கரும்பு  விவசாயிகள் பலர் கலந்து கொண்ட னர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மேலூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை குறித்து மனு அளிக்கப்பட்டது.