தஞ்சாவூர், மே 27-
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தென்னை வளர்ச்சி வாரியத் தின் உதவியுடன், தென்னை யில் மறுநடவு மற்றும் புத்து யிர் அளிக்கும் திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விவ சாயிகள் விண்ணப்பித்திட லாம் என சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஜி.சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தென்னை சாகு படியில், உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை அதி கரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சேது பாவாசத்திரம் வட்டாரத்தில் 7,500 ஹெக்டருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆங்காங்கே பூச்சி மற்றும் நோயால் பாதிக்கப் பட்ட மரங்கள், காய்க்காத மரங்கள், வயது முதிர்ந்த மரங்கள் காணப்படுகின்றன. இவற்றை வெட்டி அப்புறப் படுத்துவதற்கு தென்னை மரம் ஒன்றிற்கு ரூ.1,000- வீதம் அதிகபட்சமாக ஒரு ஹெக்டரில் 32 மரங்களுக்கு மானியம் பெறலாம்.
தென்னை மரங்களை அப்புறப்படுத்திய பிறகு அவ்விடத்தில், புதிய தென் னங்கன்றுகள் நடவு செய் வதற்கு தென்னங்கன்று ஒன்றிற்கு ரூ.40- வீதம் மானி யமும், அதிகபட்சமாக ஒரு ஹெக்டரில் 100 தென்னங் கன்றுகளுக்கு மானியம் பெறலாம்.
தென்னந்தோப்புகளில் ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து நிர்வாகத்தை செயல் படுத்திட முதலாம் ஆண்டு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.8, 750, இரண்டாம் ஆண்டு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.8,750-மானியமாக பெறலாம். பாதிக்கப்பட்டுள்ள விவசாயி கள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை நேரில் அணுகி அல்லது உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்திடலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.