மனநல கருத்தரங்கு
அறந்தாங்கி, அக்.18 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மனநல கருத்தரங்கு நைனா முகமது பெண்கள் கல்லூரி யில் நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் அப்துல் பாரி தலைமையில் நைனா முகமது கல்லூரி முதல்வர் திருச்செல்வம், தாளாளர் முகமது ஃபாருக் ஆகியோர் முன்னிலையில் செயலாளர் ஆண்டோ பிரவின் வரவேற் றார். புதுக்கோட்டை மாவட்ட அரசு மனநல மருத்துவர் முத்தமிழ்செல்வி, மருத்துவர் தட்சிணாமூர்த்தி, மருத்துவர் விஜய் ஆகியோர் கல்லூரி மாணவிகளுக்கு மனநல கருத்துரை ஆற்றினர். கல்லூ ரியின் அனைத்து மாணவிகள், இருபால் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட 750 பேர் கலந்து கொண்டனர். பொரு ளாளர் முனைவர் முபாரக் அலி நன்றி கூறினார்.
மானியத்தில் ஊட்டச்சத்து தொகுப்பு
பாபநாசம், அக்.18 - தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் வினோதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அம்மாப் பேட்டை வட்டாரத்தில் தோட்டக் கலைத்துறை மூலம் முதல மைச்சரின் மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து செடிகள் தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இத்தொகுப்பில் முருங்கை, கறிவேப்பிலை, பப்பாளிச் செடிகள் மற்றும் வாழை கட்டை ஆகியவை அடங்கும். இதில் ரூ.45 அரசு மானியத் தொகை போக, பொதுமக்கள் ரூ.15 செலுத்தி, இத்தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத் தில் பயன்பெற தோட்டக் கலைத்துறை, அம்மாப்பேட்டை வட்டாரத்தை அணுகலாம்” என கூறப்பட்டுள்ளது. இறகுபந்து போட்டி: வீரர்களுக்கு பாராட்டு அறந்தாங்கி, அக்.18 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கரகத்திகோட்டையில் வீரா இறகுபந்து கழகம் சார்பில் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 29 அணிகள் பங்குபெற்றன. அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபு -அடைக்கலம் முதல் பரிசு ரூ.15 ஆயிரமும், மீமிசல் கதிர்வேல் - துரைமுருகன் இரண்டாம் பரிசு ரூ.12 ஆயிரமும், அறந் தாங்கி விக்கி - குமார் மூன்றாம் பரிசு 9 ஆயிரமும், கரகத்திக் கோட்டை எஸ்.டி.ராஜன்-ப்ரித்யூ நான்காம் பரிசு ரூ.6 ஆயிரமும் பெற்றனர். போட்டி யில் வென்றவர்களை ஆர். ஆர்.கே. கலைமணி, கௌர வித்தார்.
பாபநாசத்தில் கண் பரிசோதனை முகாம்
பாபநாசம், அக்.19 - பாபநாசம் லயன்ஸ் கிளப், ஐடிஎப்சி பர்ஸ்ட் பாரத் நிறுவனம் பாபநாசம் கிளை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை கும்ப கோணம் இணைந்து கண் பரிசோதனை முகாமை நடத்தின. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த முகாமில் கண் மருத்துவ உதவியா ளர்கள் மணிகண்டன், தனுசு, சல்மான் பாரீஸ் ஆகியோர் 43 பேருக்கு பரிசோதனை மேற் கொண்டனர். இதில் 8 பேருக்கு கண்ணில் புரை இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும், கண்ணில் பார்வை குறைபாடு உடைய 21 பேருக்கு கண்ணாடி அணியவும், 6 பேர் மேல் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டனர். 2 பேருக்கு கண்ணில் அலர்ஜி மற்றும் 44 பேருக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, எடை கண்டறியப்பட்டது. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் செந்தில், செயலர் பன்னீர்செல்வம், பொருளாளர் மாரிமுத்து, மாவட்டத் தலைவர் ஆறுமுகம், ஐடிஎப்சி கிளை மேலாளர் கலைமணி, சமூகநலத்துறை மேலாளர் சந்துரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா
பாலையப்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் காலியாக உள்ள தொழில் மனைக்கு விண்ணப்பிக்கலாம் தஞ்சாவூர், அக்.18 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 14 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (அக்.19) நடைபெறவுள்ளது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திரு வள்ளுவன் வியாழனன்று தெரிவித்ததாவது: தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்று விக்கப்பட்டு, 43 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 14 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது. விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை வகிக்கிறார். பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் கலந்து கொள்கிறார். திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ந.பஞ்சநதம் சிறப்பு ரையாற்றுகிறார். இவ்விழாவில் 100 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், ஆய்வியல் நிறைஞர், முது நிலை, இளநிலை என மொத்தம் 656 பேர் பட்டம் பெறவுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை நிதியளிப்பின் மூலம் சிறந்த மதிப்பெண்கள், புள்ளிகளைப் பெற்ற 8 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங் கள் வழங்கப்படவுள்ளன. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 பேர் முனைவர் பட்டம் பெறவுள்ளனர். நவம்பரில் திருக்குறள் அருங்காட்சியகம் திருக்குறளை யுனெஸ்கோவில் உலகப் பொது மறை நூலாக அறிவிக்கச் செய்வதற்கு தமிழ்நாடு அரசு உதவியுடன் பேராசிரியர் இரா. குறிஞ்சிவேந்தன் உள்ளிட் டோர் பணியாற்றி வருகின்றனர். இதை யொட்டி, இப்பல்கலைக்கழகத்தில் திருக்குறள் சுவடிகள் அருங்காட்சியகம் நவம்பர் மாதம் இறுதியில் அமைக்கப்பட வுள்ளது. இதில், திருக்குறள் தொடர்பான ஆய்வுகள், ஓலைச்சுவடிகள், வெளிநாட்டு அருங்காட்சியகத்திலுள்ள ஓலைச்சுவடி களின் நகல்கள் உள்ளிட்டவை இடம்பெறும். இவ்வாறு திருவள்ளுவன் தெரிவித்தார். அப்போது பதிவாளர் (பொ) சி.தியாக ராஜன், புலத் தலைவர்கள் பெ.இளையாப் பிள்ளை, இரா.குறிஞ்சிவேந்தன், மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) இரா.சு.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பாலையப்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் காலியாக உள்ள தொழில் மனைக்கு விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், அக்.18 - தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிட்கோ நிறுவ னத்திற்கு சொந்தமான தொழிற்பேட்டை, பாலையப் பட்டி (தெற்கு)-ல் உள்ளது. இந்த தொழிற்பேட்டையில் காலியாக உள்ள தொழில் மனைகள் தொழில் முனை வோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அதன்படி பாலையப் பட்டி (தெற்கு)-ல் மொத்தம் 19 தொழில் மனைகள் காலி யாக உள்ளன. இந்த பாலை யப்பட்டி (தெற்கு) சிட்கோ தொழிற்பேட்டையில் புதி தாக தொழில் தொடங்க, தொழில்மனைகள் வாங்க விரும்புவோர் www.tan sidco.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேற்கண்ட காலி தொழில் மனைகளை பார்வையிட விரும்புவோர் தஞ்சாவூரில் உள்ள சிட்கோ கிளை மேலாளர் செல்வகுமார் என்பவரை 9445006574 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம். மேலும் bmtnj@ tansidco.org என்ற இணைய தள முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித் துள்ளார்.
உயிர்ம வேளாண்மை மாதிரி திடல்கள் அமைப்பு
பாபநாசம், அக்.18 - தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை சார்பில் மன்னுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் சிறப்பு திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டா ரங்களிலும் உயிர்ம வேளாண்மை மாதிரி திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனொரு பகுதியாக திருவையாறு அருகே பூதலூர் வட்டாரத்தில், மாரனேரி கிராமத்தில் இயற்கை விவசாயி பசுபதிவயலில் உயிர்ம வேளாண்மை மாதிரி திடல் அமைக்கப்பட்டுள்ளது. இத்திடலில் பாரம்பரிய ரகங்க ளான அறுபதாம் குருவை, கருங்குருவை, ரத்தசாலி மற்றும் சாதாரண ரகமான அம்பை 16 ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கு அடி உரம் முதல் அறுவடை வரை இயற்கை இடுபொருள்களான மீன் அமிலம், ஜீவா மிர்தம், இலை கரைசல் ஆகியவை மூலம் ஊட்டச்சத்து மற்றும் பயிர் பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தென்னை, வாழை, பலா போன்ற மரங்களுக் கான ஊட்டச்சத்து மற்றும் பயிர் பாதுகாப்பும் இயற்கை முறையில் மேற்கொள்ளப்படுகிறது. தென்னையில் ஆங்காங்கே ஆமணக்கு பிண்ணாக்கு மற்றும் கோமி யம் கலந்த கலவை வைக்கப்பட்டு காண்டாமிருக வண்டு கள் கவர்ந்து அழிக்கப்படுகின்றன. விவசாயி பசுபதியின் வயலில் விளைந்த மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, இலுப்பை பூ சம்பா, பூங்கார் போன்ற அரிசி வகைகளின் கஞ்சி, அவல் ஆகியவற்றை தினசரி உணவாக உட்கொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து ஓரளவிற்கு மீண்டு வந்துள்ளதாக மாரனேரி கிராம விவசாயிகள் தெரிவித்தனர். ஆரோக்கியமான, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி உடலுக்கு ஆரோக்கியமான வாழ்வை தரும் விஷமில்லாத உணவு வகைகளை அனைத்து விவசாயிகளும் சிறிய பரப்பளவி லாவது உற்பத்தி செய்திட முன்வர வேண்டும் என தஞ்சா வூர் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சுஜாதா கேட்டுக் கொண்டார்.
சிபிஎம் கும்பகோணம் நகர கிளை மாநாடுகள்
கும்பகோணம், அக்.18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் மாநகர 24 ஆவது மாநாட்டையொட்டி கும்பகோணம் மாநக ரத்திற்குட்பட்ட 17 கிளைகளில் கட்சி கிளை மாநாடுகள் நடைபெற்றன. அதில் புதிய கிளைச் செயலாளராக அஞ்சுகம் நகர் ராஜகோபால், ஆட்டோ கட்சி கிளை சங்கர், பொன்னி யம்மன் கோவில்தெரு மணி, பெண்கள் கிளை தமிழரசி, 15 ஆவது வார்டு ஜோதி, பட்டக்கால் தெரு மகேஸ்வரி, பாணாதுறை பழ.அன்புமணி, மேலக்காவேரி நாகராஜ், தாராசுரம் 2 ஆவது கிளை பாபு, எழுமிச்சங்காபாளையம் ராமச்சந்திரன், 29 ஆவது வார்டு தங்கராசு, துக்கம்பா ளையதெரு கணேசன், பழைய பேருந்து நிலையம் ராம மூர்த்தி, நெசவாளர்கள் அரங்கம் சுப்புராமன், 1 ஆவது கிளை சீனிவாசன், மாணவர்கள் கிளை பிரதீப், பால் அரங்க கிளை குணசேகரன் ஆகியோர் 17 கிளைகளுக்கு புதிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டனர். கிளை மாநாடுகள் மாநகரச் செயலாளர் செந்தில் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், நகரக் குழு உறுப்பினர்கள் கண்ணன், மாமன்ற உறுப்பி னர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது கும்பகோ ணம் மாநகர மாநாடு சனிக்கிழமை தாராசுரத்தில் நடை பெறுகிறது.
மயிலாடுதுறையில் 2 வாக்குச்சாவடி மையங்கள் அதிகரிப்பு: ஆட்சியர்
மயிலாடுதுறை, அக்.18 - மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளில் 860 வாக்குச்சாவடி மையங்கள் இருந்த நிலையில் தற்போது புதிய இரண்டு வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில், 426 இடங்களில் 862 வாக்குச்சாவடி மையங்கள் தற்போது அதிகரிக்கப் பட்டுள்ளது. இவற்றில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 151 இடங்க ளில் 288 வாக்குச்சாவடிகள், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 137 இடங்களில் 266 வாக்குச்சாவடிகள் மற்றும் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 138 இடங்க ளில் 308 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. 2025 சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளின் ஒரு பகுதி யாக அனைத்து வாக்குச்சாவடிகளையும் கள ஆய்வு செய்து மறுசீரமைப்பு செய்திட ஏதுவாக பழுதான மற்றும் இடிக்கப்பட்ட கட்டிடங்கள், வாக்குச்சாவடியில் உள்ள பகுதிகளை பிரித்தல், வாக்காளர்களின் வசதிக்கேற்ப பிரிவுகளை பிரித்தல் உள்ளிட்ட காரணிகளை அனு சரித்தும், பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சி பிரமுகர்கள் கருத்துகளின் அடிப்படையிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்திட தலைமை தேர்தல் ஆணையர் அவர் களுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது. அவை தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மாற்றம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அறியும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலு வலகம், வருவாய் கோட்ட அலுவலகம், வட்டாட்சியர் அலு வலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பார்வைக் காக வைக்கப்பட்டுள்ளது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
உலக பசி குறியீட்டில் இந்தியா பின்தங்கி இருப்பது வேதனை
பாபநாசம் அக்.18 - உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கி இருப்பது வேதனை அளிக்கிறது என மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு உலகளாவிய அளவில் ஊட்டச் சத்துக் குறைபாடுள்ள, மக்கள் அதிகம் வாழும் தர வரிசையில் இந்தியா 7 ஆவது இடத்தில் உள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது கவலை அளிக்கிறது. பசி குறியீட்டில், இந்தியா தனது அண்டை நாடுகளான மியான்மர், இலங்கை, நேபாளம் மற்றும் வங்கதேசத்தை விட பின்தங்கி உள்ளது மேலும் வேதனையானது. இந்தியாவில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு கடுமையாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாக உள்ளது. அதே சமயம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ளது. நாட்டில் ஊட்டச்சத்துக் குறை பாடு 13.7 சதவீதமாக உள்ளது. ஒன்றிய பாஜக அரசு வளர்ச்சி என்ற பெயரில் விளிம்பு நிலை மக்களை கவனத்தில் கொள்ளவில்லை என்பதை இந்த ஆய்வறிக்கை மிகத் துல்லியமாக சுட்டிக் காட்டுகிறது. இந்த அவல நிலைக்கு ஒன்றிய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். மேல் தட்டு வர்க்கத் தைச் சேர்ந்த ஒரு சிலரை மட்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுச் சென்று, நடுத்தர மக்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் நலனை பாதுகாக்க பாஜக தலைமையி லான ஒன்றிய அரசு தவறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என கூறப்பட்டுள்ளது.
தீபாவளி வரை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை நிறுத்தி வைத்திடுக! சிபிஎம் வலியுறுத்தல்
புதுக்கோட்டை, அக்.18- புதுக்கோட்டை மாநாகராட்சிப் பகுதி களில் வரும் தீபாவளி பண்டிகை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி பண்டிகை வருகிற அக்.31 இல் வருகிறது. இதையொட்டி பல்வேறு சிறு, குறு வியா பாரிகளும், தரைக்கடை வியாபாரிகளும் தங்களுடைய பொருட்களை விற்பனைக் காக வைத்துள்ளனர். இந்நிலையில், புதுக் கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட புதுக் கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் இருபுறங்கிலும் தீபா வளி பண்டிகையை முன்னிட்டு தரைக்கடை வியாபாரிகள் விற்பனை செய்வார் கள். சாலை விரிவாக்கப் பணிகளால் தீபாவளிப் பண்டிகைக்காக பொருட்களை வைத்து விற்பனை செய்ய இடம் கிடைக்கா மல் சிரமப்படும் சூழல் ஏற்படும். இதனால், பல்வேறு சிறு, குறு, தரைக்கடை வியாபா ரிகளின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே தீபாவளிப் பண்டிக்கை வரை மேற்படி ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், வழக்கம் போல தரைக்கடை வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய உரிய இடத்தினை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கித் தர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.