திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட உருமு தனலட்சுமி கல்லூரியில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சூரியா தலைமையில் புதனன்று சாலை மறியல் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜி.கே.மோகன், மாவட்ட துணை செயலாளர் ஆர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரதாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.