மயிலாடுதுறை, பிப்.18 - மயிலாடுதுறையில் மாநில அளவிலான சுவர் ஓவியப் போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை டாக்டர் வர தாச்சாரியார் பூங்காவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வனம் தன்னார்வ அமைப்பு மற்றும் மயி லாடுதுறை நகராட்சி இணைந்து நடத்திய மாநில அளவிலான சுவர் ஓவியப் போட்டியை மாவட்ட ஆட்சி யர் ஏ.பி.மகாபாரதி பார்வையிட்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உரையாற்றுகையில், “தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வனம் தன் னார்வ அமைப்பு மற்றும் மயிலாடு துறை நகராட்சி இணைந்து நடத்தும் மாநில அளவிலான சுவர் ஓவியப் போட்டியில், மக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தும் விதமாக சுவர் விளம்பரம் வரையப்பட்டுள்ளது. இது இப் பூங்காவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் உருவச் சிலையானது, தமிழ்நாடு முதல மைச்சரால் கடந்த 10.5.2023 அன்று இப்பூங்காவில் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சிப் பகுதி யில் குப்பைகள் தேங்காமல் இருக் கும் வகையில் அனைத்து நடவடிக் கையும் எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்த, அனைவரும் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கடைபிடிக்க வேண்டும். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரி யம், வனம் தன்னார்வ அமைப்பு மற்றும் மயிலாடுதுறை நகராட்சிக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன்” என்றார். தொடர்ந்து சுவர் ஓவியப் போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி னார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, மயி லாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மயிலாடுதுறை வரு வாய் கோட்டாட்சியர் யுரேகா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி, மயிலாடுதுறை நகர் மன்ற துணைத்தலைவர் சிவக்குமார், வனம் தன்னார்வ அமைப்பு வனம் கலைமணி மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.