கரூர், செப்.2 - மாநில அளவிலான தடகளப் போட்டி களுக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு கரூரில் நடைபெற்றது. கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாநில அளவிலான தடகள போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்வதற்கான விளையாட்டு போட்டிகள், புலியூர் கவுண்டம் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றன. விளையாட்டுப் போட்டிக்கு கரூர் மாவட்ட தடகள சங்க தலைவர் எம்.சி.கனகராஜ் தலைமை வகித்தார். முதல் நாள் ஆண்களுக்கு நடைபெற்ற தடகளப் போட்டிகளை சேரன் உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வர் அமுதா துவக்கி வைத்துப் பேசினார். 2 ஆம் நாள் பெண்களுக்கான போட்டிகளை ஜிம்னாஸ்டிக் முன்னாள் வீரர் செல்வம் துவக்கி வைத்துப் பேசினார். பசுபதிபாளையம் உதவி காவல் ஆய்வா ளர் உதயகுமார், கரூர் அமெச்சூர் கபடி சங்க செயலாளர் சேதுராமன், சர்வதேச தடகள வீரர் வீரப்பன், தடகள சங்க நாமக்கல் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலபதி, கரூர் மாவட்டச் செயலாளர் என்.பெரு மாள், துணைத்தலைவர் எஸ்.பி.குமார், பொருளாளர் வி.பி.செல்வராஜன் ஆகி யோர் போட்டிகளில் முதல் மூன்று இடங் களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கி பாராட்டினர். போட்டியில் 14, 16, 18, 20 வயது பிரிவுகள் மற்றும் ஓப்பன் பிரிவு என பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 100மீ, 200மீ, 400மீ, 800 மீ, 1200 மீ ஓட்டப் பந்தயங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் உட்பட 90 போட்டிகள் நடைபெற்றன. மேலும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாண விகள் செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.