தஞ்சாவூர், டிச.2- தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் ‘ஸ்டார் காலேஜ் திட்டம்’ பற்றிய ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவ னங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்கா வலர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா, கல்வி யியல் கல்லூரி முதல்வர் ப.சுப்ரமணியன், துணை முதல்வர் இரா.தங்கராஜ் மற்றும் ஆராய்ச்சி புலத் தலைவர் கோ.அர்ச்சுனன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை இணை பேராசிரியர் இரா.ராஜேந்திரன் பங் கேற்று உரையாற்றினார். முன்னதாக உயிரி தொழில்நுட்பத் துறை தலைவர் இரா.ராஜ குமார் வரவேற்றார். நுண்ணுயிரியல் துறை லா.பிரின்ஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா. கண்ணன் செய்திருந்தார்.