கும்பகோணம், மார்ச் 2- நவக்கிரக தலங்களுக்கான சிறப்பு சுற்றுலா பேருந்து ஏப்ரல் 1 முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப, தமிழக அரசு சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தி லிருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவக்கிரக ஸ்தலங்க ளுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து, மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடை யும் வகையில் நவக்கிரக சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. பிப். 24 முதல் இயக்கப்படும் இந்த சிறப்பு பேருந்து பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு பயணக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.750/- நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்பட்ட இச்சிறப்பு சுற்றுலா பேருந்து, வரும் மார்ச் 7 முதல் கூடு தலாக அனைத்து வியாழக்கிழமை களிலும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்கு பொது மக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும், வாரம் முழுவதும் பேருந்துகளை இயக்கி பொது மக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடமிருந்து கோரிக் கைகள் பெறப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாடு முத லமைச்சர் உத்தரவின்படி ஏப்ரல் 1 அன்று முதல் வாரத்தில் 7 நாட்க ளும் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம், கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் கும்பகோ ணம் மத்திய பேருந்து நிலையத் திலிருந்து நவக்கிரக சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கப்பட உள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரி வித்துள்ளார்.