பாபநாசம், நவ.22 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி 2024-25 இன்கீழ் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட, திருவலஞ்சுழி ஊராட்சி, மணப்படையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுந்தரப் பெருமாள் கோவில் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி (கிழக்கு) உள்ளிட்ட பள்ளிகளில் தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. இதை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா நேரில் சென்று பார்வையிட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே உரையாடினார். கும்பகோணம் பி.டி.ஓ.க்கள் சிவக்குமார், சுவாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் அன்பழகன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் திரு வலஞ்சுழி திவ்யா, சுந்தரப் பெருமாள் கோவில் சேது ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.