திருச்சிராப்பள்ளி, பிப்.12- போதை இல்லா சமூகம் அமைப்போம், இளைஞர்களை மீட்போம் என்பதை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம் சார்பில் ஞாயிறன்று திருச்சி ராப்பள்ளி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம், திருவெறும் பூர் பேருந்து நிலையம். தா. பேட்டை, முசிறி, மணப்பாறை ஆகிய இடங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அமைப்பின் மாநகர் மாவட்டத் தலைவர் லெனின், மாவட்டச் செய லாளர் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். கையெழுத்து இயக் கத்தை ஸ்ரீதர் துவக்கி வைத்தார். திருவெறும்பூர் ஒன்றியத் தலை வர் தமிழ்ச்செல்வன், மாநகர் மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில இணைசெயலாளர் செல்வராஜ், சுல்தான், தா.பேட்டையில் ஒன்றி யத் தலைவர் சுதாகர், பாண்டியன், மாவட்டச் செயலாளர் பாலகுமார், முசிறியில் ஒன்றியத் தலைவர் விஜய் பாபு, புலிவலம் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்குமார், மாவட்டப் பொருளாளர் ஆனை முத்து, மணப்பாறையில் ஒன்றியத் தலைவர் வாசு, மாணவர் சங்க மாநில இணை செயலாளர் மோகன், வாலிபர் சங்க வட்ட செயலாளர் அய்யாவு உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.