districts

img

மத்திய 2 ஆம் பகுதிக்குழு மூத்த தோழர் பெருமாள் (எ) கிருஷ்ணன் காலமானார்

மதுரை, டிச.13- மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய 2 ஆம் பகுதிக்குழு பூந்தோட்டம் பகுதி மறைந்த மூத்த கட்சி உறுப்பினர்கள் சுதந்திரப் போராட்ட வீரர் எஸ். பாலு தேவர் - மாதர் சங்க மூத்த  தலைவர் நாகம்மாள் தம்பதி யரின் மகனும், முன்னாள் மாமன்ற உறுப்பினர் தோழர் விஜயாவின் கணவருமான மூத்த கட்சி உறுப்பினர் தோழர் பெருமாள் (எ) கிருஷ்ணன்  வியாழனன்று உடல்நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்தில் காலமானார்.  தோழர் பெருமாள், மத்திய பகுதி மட்டுமல்ல மதுரை முழு வதும் கட்சி தோழர்களால் நன்கு  அறியப்பட்டவர். 1970 ஆம் ஆண்டு விவசாயிகளுக்காக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு 20 நாட்கள் சிறையில் இருந்தார். பின்னர், தந்தையின் தொழிலை செய்து வந்தார். பூந்தோட்ட கிளைச் செயலாளராக நீண்ட நாட்கள் இருந்தார். கடந்த ஓராண்டு காலமாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வீட்டில் இருப்பவர்களது பரா மரிப்பில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், திடீர்  உடல்நலக் குறைவு ஏற்பட்டு வியாழனன்று  காலமானார்.  அவருக்கு, மூன்று சகோதரி கள் ஒரு சகோதரன் உட்பட நான்கு பேர் இருந்தனர். சகோ தரி உஷா என்பவர் தோழர் என். சங்கரய்யாவின் மருமகள் ஆவார். மற்றொரு தங்கை விஜயலட்சுமி என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை பல்லாவரம் பகுதியில், மாமன்ற உறுப்பின ராக இருந்து வருகிறார். மற் றொரு தங்கை ப்ரீத்தி, மதுரை மத்திய ஒன்றாம் பகுதியில் கட்சி உறுப்பினராக இருந்து செயல்பட்டு வருகிறார். அவ ருடைய சகோதரர் பரத்வாஜ் நீண்ட நாட்களாக கட்சி உறுப்பி னராக இருந்து செயல்பட்டவர். அதேபோல், தோழர் பெருமா ளின் மகள் அகல்யா, வாலிபர் சங்க மாநிலக் குழு உறுப்பின ராக இருந்து செயல்பட்டவர். மேலும் அவருக்கு ரதிபாலா, கவிதா என்ற மகள்களும் உள்ள னர். பெரும்பாலும், தோழர் பெருமாளின் தந்தை சுதந்திரப் போராட்ட தியாகி பூந்தோட்டம் எஸ். பாலு, நாகம்மாளை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர். அதேபோல் அவ ருடைய குடும்பத்தில் உள்ள பலரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். தோழர் பெருமாள், பொருளா தார ரீதியாகவும் கட்சிக்கு அப்பகுதியில் பல்வேறு உதவிகளை செய்து வந்தவர்.  அவருடைய மறைவுச் செய்தி அறிந்து மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், ஜா. நரசிம்மன், ம. பாலசுப்பிர மணியம், இரா. லெனின், வை.  ஸ்டாலின், அ. கோவிந்தராஜன், மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன், மாமன்ற உறுப்பி னர் டி. குமரவேல் மத்திய - 2 ஆம் பகுதிக்குழுச் செயலாளர் பி. கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தோழர் பெரு மாள் உடலுக்கு மாலை வைத்து  அஞ்சலி செலுத்தினார்கள். வெள்ளியன்று ராஜா மில் ரோடு சோலை கோ வில் தோப்பில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு தத்தனேரி ணமயானத்தை அடைந்தது. அங்கு இறுதி நிகழ்ச்சி நடை பெற்றது.