districts

img

சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.9- திருச்சி மாவட்டம் நேதாஜி நகர் விரிவாக்கப் பகுதி நலச் சங் கத்தின் சார்பில் சேறு, சகதியுமாக உள்ள சாலையை சீர் செய்யக் கோரி நாற்று நடும் போராட்டம் வியாழனன்று நடைபெற்றது.  போராட்டத்திற்கு, நல சங்க தலைவர் குத்புதீன் தலைமை  தாங்கினார். இதில், குடியிருப் போர் நல சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லெனின், மாவட்ட குழு உறுப்பினர் மணிமா றன், நல சங்க செயலாளர் இளை யராஜா, நேதாஜி நகர் நல சங்க தலைவர் கணேசன், நல சங்க துணைத்தலைவர் திருவேங்க டம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், திருச்சி மாந கராட்சிக்குட்பட்ட 65வது வார்டு திருவெறும்பூர் நேதாஜி நகர் விரிவாக்க பகுதியில் சேறு, சகதி யுமாக உள்ள சாலையை சீர் செய்ய வேண்டும், அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு போன்றவற்றை உடனே அமைத்து தரவேண்டும். தெருக் களில் சுற்றித்திரியும் வெறி நாய்கள், பன்றிகளை உடனே  பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.