districts

img

அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வி அமைச்சர் திடீர் ஆய்வு

கும்பகோணம்/அரியலூர், ஜன.5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  அருகே உள்ள ஆடுதுறையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்  மகேஸ் பொய்யாமொழி, திருவிடை மருதூர் சட்டமன்றத் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆடுதுறை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப் பட்டு வரும் 2 புதிய வகுப்பறை களை பார்வையிட்டு, அரசின் சார்பாக அளிக்கப்படும் போட்டித் தேர்வு களுக்கான பயிற்சியில் பங்கேற்றுள்ள மாணவிகளை சந்தித்து வாழ்த்து தெரி வித்தார். பள்ளியின் மேம்பாட்டிற்கு தேவை யான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்து, பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களை சந்தித்து, அவர் களை ஊக்கப்படுத்தும் வகையில் கலந்துரையாடினார். அரியலூர் அரியலூர் மாவட்டம் விளந்தை ஊராட்சியில் ஒரே பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளிகளில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு, மைதானம் மேம்பாட்டிற்கும், பள்ளி வளாக மேம்பாட்டிற்கும் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொ டர்ந்து மாணவர்களை பாடப் புத்தகத்தை  வாசிக்கச் சொல்லி அவர்களின் வாசிப்புத் திறனை ஆய்வு செய்தார். பொதுத் தேர்வு குறித்து எந்தவித அச்ச மும் வேண்டாம் என மாணவர்களுக்கு  அறிவுரை வழங்கினார்.