சத்திரம் பேருந்து நிலைய கடைகளின் வாடகை சுமார்
ரூ.10 லட்சம் உடனடி வசூல்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 16 - திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப் பட்ட பேருந்து நிலைய வளாகத்தில் திருச்சி மாநக ராட்சிக்கு சொந்தமாக சுமார் 35 கடைகள் உள்ளன. இந்த கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்துபவர்கள் கடந்த 18 மாதங்களாக சுமார் ஒரு கோடியே 62 லட்சத்திற்கும் மேல் வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்தனர்.
அதில் வாடகைக்கான வைப்புத் தொகையை (டெபாசிட்) கடந்து, வாடகை பாக்கி வைத்துள்ள 4 கடை களை மட்டும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்த னர். எஞ்சிய 20 கடைகள் கண்டறியப்பட்டு, வாடகை தொகையை கடை நடத்துபவர்கள் உடனே செலுத்த வேண்டுமென எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், மாநகராட்சி ஆணையர் சரவணன் உத்தர வின் பேரில் பேருந்து நிலையத்திற்குள் இருந்த ஆக்கிர மிப்பு கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி னர்.
கடை வாடகைக்கான வைப்புத் தொகையைக் கடந்து, வாடகை பாக்கி வைத்துள்ளவர்களின் கடைகளை அதி காரிகள் பூட்டி சீல் வைத்தவுடன், சுமார் 10 லட்சம் ரூபாய் மாநகராட்சிக்கு வாடகை பாக்கி வசூலானது. அதில் வாடகை பாக்கியை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டும் கடை மீண்டும் திறந்து விடப்பட்டது.
தனியார் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய போதை நபர்
அறந்தாங்கி, ஜூன் 16- அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற நேரத்தில், போதையிலிருந்த நபர் பேருந்தை இயக்கிய தால் விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலை யத்தில் நின்று கொண்டிருந்த கே.பி.எல் தனியார் பேருந்தை, கிடங்கி வயல் பகுதியைச் சேர்த்த ரகு என்ற இளைஞர் போதையில் பேருந்து நிலையத்திலிருந்து கட்டு மாவடி முக்கம் வழியாக ஓட்டிச் சென்றுள்ளார்.
இதில் பேருந்தை, எல்.என்.புரம் பகுதியில் நின்று கொண்டிருந்த கார் மற்றும் சிக்கன் நூடுல்ஸ் கடை மீது மோதி வாகன விபத்து ஏற்படுத்தியுள்ளார். அருகில் இருந்த வர்கள் உடனடியாக பேருந்தை இயக்கிய நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் ஆவுடையார்கோ வில் தாலுகா கிடங்கிவயல் பகுதியைச் சேர்ந்த ரகு (32) என தெரிய வந்தது. மேலும், பேருந்து நிலையத்தில் சாவியை வண்டியிலேயே வைத்ததால் எனக்கு பேருந்து ஓட்ட ஆசையாக இருந்தது. அதனால் ஓட்டி வந்தேன் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தை அறிந்த அறந்தாங்கி காவல்துறையி னர் மது போதையில் இருந்த நபரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் பேருந்துகளை நிறுத்தும் ஓட்டுநர்கள், சாவியை எடுத்து பத்திரப்படுத்துவது நல்லது.
இதேபோன்று, ஐந்து மாதங்களுக்கு முன்பு அறந்தாங்கி பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை மனநிலை பாதிக்கப்பட்ட நபர் 50 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது குறிப் பிடத்தக்கது.
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு: திருச்சியில் 4,705 பேர் எழுதினர்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 16- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு திருச்சியில் 12 மையங்க ளில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் 4705 பேர் தேர்வு எழுதினர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்ப டும் குடிமைப் பணிகளுக்கானத் தேர்வுகள் நடத்தப்படு கின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியி டங்களுக்குத் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 1206 பணியிடங்களுக்கான, குடிமைப் பணிக்கான யுபிஎஸ்சி தேர்வின் முதல் நிலைத்தேர்வு ஞாயிறன்று நாடு முழுவ தும் நடந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கி 11:30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 4:30 மணி வரையிலும் என இரண்டு தாள்களுக்கு தேர்வு நடை பெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் 12 மையங்களில் 4,705 பேர் இந்த தேர்வினை எழுதினர். தேர்வுக்கூட மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருச்சி மாந கரில் அமைக்கப்பட்டுள்ள வெஸ்ட்ரி பள்ளி, செயின்ட் ஜேம்ஸ் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
ஜூன் 19 ஒரத்தநாட்டில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்
தஞ்சாவூர், ஜூன் 16- மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்கு டன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஜூன் 19 (புதன்கிழமை) அன்று ஒரத்தநாடு வட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலை மையில் அனைத்துத் துறை அலுவலர்கள் முகாம் மேற் கொண்டு ஜூன் 19 அன்று காலை முதல் களஆய்வுப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அன்று மதியம் 2.30 மணியளவில் தொடர்பு டைய துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டமானது, ஒரத்தநாடு வட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஜூன் 19 அன்று மாலை 04.30 மணியளவில் ஒரத்தநாடு வட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
அதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்து பயன டையுமாறு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித் துள்ளார்.
காய்கறிகளை உழவர் சந்தையில் விற்க விவசாயிகளுக்கு அழைப்பு
அரியலூர், ஜூன் 16 - ஜெயங்கொண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் விளையும் காய்கறிகளை ஜெயங்கொண்டம் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து கூடுதல் வருமானம் பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர்கள் நேரடியாக தங்களிடம் காய்கறிகளை வாங்கும்போது, அவர்களுக்கும் திருப்தி ஏற்படுகிறது. விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கிறது. எனவே விவசாயிகள் ஜெயங்கொண்டம் உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்திட, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) பெரம்பலூர் எஸ்தர் பிரேமகுமாரி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தொடர்புக்கு விவசாயிகள் ஜெயங்கொண்டம் உழவர் சந்தை அலுவலர்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.