நாகர்கோவில், ஜன.23- சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் கடந்த 14ஆம் தேதி தைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் 8ஆம் நாளான வெள்ளியன்று காலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மாலை 4 மணிக்கு அய்யா கலிவேட்டைக்கு புறப் படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி அலங்கரிக் கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் தலை மைப் பதியின் முன்பு இருந்து கலி வேட்டைக் குப் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பால. ஜனாதிபதி தலைமை வகித்தார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்து குடைகள் மேள தாளங்கள் முன் செல்ல வாகனம் கலி வேட்டைக்கு புறப் பட்டது. தலைமை பதி முன்பு இருந்து புறப்பட்ட வாக னம் தலைமை பதியை சுற்றி வந்து வடக்கு வாசல் பகுதிக்கு சென்றது. அங்கிருந்து முத்திரி கிணற்றங்கரைக்கு சென்றது. அங்கு அய்யா வழி பக்தர்கள் முன்னிலையில் கலி வேட்டையா டும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாகனம் செல்லும் வழிகளில் அப்பகுதி மக்கள் அய்யாவுக்கு சுருள் படைத்து வழிபட்டனர்.