districts

img

சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளராக எஸ்.கந்தசாமி தேர்வு

தஞ்சாவூர், நவ.13 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட் டம் பட்டுக்கோட்டை ஒன்றிய 14 ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. மாநாட்டுக்கு தனபால், மோரீஸ் அண்ணாதுரை, நதியா ஆகியோர் தலைமை  வகித்தனர். ரெ.ஞானசூரி யன் வரவேற்றார். மூத்த தோழர் பாலகிருஷ்ணன் கொடியேற்றினார். மாவட்டச்  செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், என்.வி. கண்ணன், எம்.செல்வம் ஆகி யோர் பேசினர்.  மாநாட்டில், 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு வும், ஒன்றியச் செயலாள ராக எஸ்.கந்தசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.  பட்டுக்கோட்டை வழி யாக காரைக்குடியில் இருந்து சென்னைக்கு தின சரி ரயில் இயக்க வேண்டும். பட்டுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, நகரத்தைச் சுற்றி புறவழிச்சாலை அமைக்க வேண்டும். நீண்ட  காலமாக கிடப்பில் போடப்பட் டுள்ள பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காட்டாறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும்.  ஆரம்ப சுகாதார நிலை யங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். வேதபுரி  வாய்க்காலின் இருபுறமும் கான்கிரீட் சுவர் அமைக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.