விருதுநகர், செப்.17- சிவகாசியில் உள்ள ஆதி திராவிடர் மாணவியர் விடுதியை புதிய அரசு கட்டி டத்தில் இயக்க வேண்டும். பழுதடைந்த அரசு மாணவர் விடுதிக்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டுமென தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமைப்பின் மாவட்டச் செயலாளர் கே.முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது: சிவகாசி சிறுகுளம் கண்மாய் அருகே இயங்கி வந்த அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதி, கடந்த 2016-ஆம் ஆண்டு நீர்நிலை புறம்போக்கு ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்ட போது இடிக்கப் பட்டது. அதன்பின் மாணவியர் விடுதி சிவ காசி சாட்சியாபுரத்தில் வாடகை கட்டி டத்தில் ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகள் விடுதி மாற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு கல்லூரி மாணவி கள் விடுதியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த விடுதியில் சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 51 மாணவிகள் மற்றும் தனியார் கல்லூரி களில் பயிலும் 2 மாணவிகள் உட்பட 53 பேர் தங்கியுள்ளனனர். இக்கட்டிடத்தில் இரு அறை, ஒரு ஹால் மற்றும் 3 கழிப்ப றைகள் மட்டுமே உள்ளன. இதனால் மாணவிகள் பொருட்களை வைப்பதற்கு போதிய இட வசதி இல்லை. மேலும், கழிப்பறை மற்றும் தங்குமிட வசதியின்றி நெருக்கடியில் வசித்து வரு கின்றனர். இதனால் அடிப்படை வசதிகளு டன் கூடிய பாதுகாப்பான விடுதியை ஏற் படுத்தி தர வேண்டும் என மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். இந்நிலையில், கடந்த 13-ந்தேதி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ் இரவு நேரத்தில் மாணவியர் விடு திக்கு விதிமுறைகளை மீறி ஆய்வுக்கு சென்றுள்ளார். பின்பு, அங்குள்ள மாண விகளை தரக்குறைவாக பேசியதோடு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மாணவிகள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளனர். எனவே, மாணவிகள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு கட்டிடம் அமைத்து கொடுக்க வேண்டும். அதுவரை அடிப்படை வசதிகள் உள்ள பாதுகாப்பான இடத்தில் அவர்களை தங்க வைக்க வேண்டும். மேலும் மாணவர் விடு திக்கு மாற்றம் செய்யும் முடிவை கைவிடு வதோடு, ஏற்கனவே பழுதடைந்த நிலை யில் உள்ள மாணவர் விடுதியினை உட னடியாக சீரமைக்க வேண்டும். மேலும், மாணவிகளிடம் அவதூறாக பேசிய மாவட்ட ஆதி திராவிடர் நல அலு வலர் ரமேஷ் மீது சட்டப்படி உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியு றுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.