திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் நலத் திட்ட செயல்பாடுகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் தலைமை வகிக்க, பிற்படுத்தப்பட்ட நலத்துறை இயக்குநர் காமராஜ், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் நலத்துறை ஆணையர் மதிவாணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.