districts

img

மாத்தூரில் கால்நடை மருத்துவமனை அமைக்க கோரிக்கை

கும்பகோணம், ஜூன் 26- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஊராட்சி  ஒன்றியத்திற்கு உட்பட்ட மாத்தூர் ஊராட்சி யில், பொதுமக்களுக்கு அடிப்படை வசதி கள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாத்தூர் கடைவீதியில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாத்தூர் கிளைச் செயலாளர் ஆர்.ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் தஞ்சை மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜெயபால், திருவிடைமரு தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனி வேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாத்தூர் ஊராட்சியில் கால்நடை மருத்து வமனை மற்றும் அரசு நேரடி நெல் கொள்முதல்  நிலையம் அமைக்க வேண்டும். மாத்தூர் ஊராட்சியில் உள்ள பெரிய வாய்க்காலை தூர்வாரி வரப்பில் உள்ள புதர்களை அகற்றி,  சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு  வர வேண்டும். நூறு நாள் வேலையை அனை வருக்கும் வழங்கி நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கி முறைகேடுகளை தடுக்க வேண்டும். மாத்தூர் ஊராட்சி ரேஷன் கடைகளில் நிழல் கூரை அமைத்தும்,  மேல மாத்தூரில் பகுதி நேர ரேஷன் கடையும்  அமைக்க வேண்டும். திருவாரூர் சாலை மாத்தூர் அந்தோணி யார் கோவில் தெருவில் பேருந்து நின்று செல்லும் வகையில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும். ஊராட்சியில் உள்ள  ஏழை - எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா,  வீடு வழங்க வேண்டும். மேலமாத்தூர் சுடு காட்டிற்கு செல்லும் பாதையை தார்ச் சாலை யாக மாற்ற வேண்டும். திருமலை ராஜன்  ஆற்றில் அய்யனார் கோயில் தெருவில் வசித்து வரும் மக்கள் பயன்படும் வகையில் படித்துறை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.