தஞ்சாவூர், ஆக.9-
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வாயிலில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் பேருந்து வசதியை கூடுதலாக்க வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு புறக்க ணிப்பு போராட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் அர்ஜுன் தலைமை வகித்தார். கிளை நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலி ருந்து, பழைய பேருந்து நிலையம் செல்ல பேருந்து வசதிகள் மிகக் குறைவாக உள் ளது. இதனால் மாணவர்கள் படியில் தொங்கியவாறு செல்கின்றனர். அவ்வாறு படியில் தொங்கிச் செல்லும் போது மாண வர்கள் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்ற னர்.
மேலும் இது தொடர்பாக கும்பகோணம் போக்குவரத்து அலுவலகத்திலும், தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், கல்லூரி நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. எனவே இந்தக் கல்லூரியில் படிக்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் நலன் கருதி, இந்த தடத்தில் கூடுதலான பேருந்து களை இயக்க வலியுறுத்தி கண்டன முழக்க மிட்டனர்.