districts

img

பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்களின் விடுதியை தூய்மையாக பராமரிக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 22- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சி யர் பிரதீப் குமார் தலைமையில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்ளே செயல்பட்டு வரும் (இராமலிங்க  நகர்) பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்க ளின் கல்லூரி விடுதி முழுவதும் தூய்மை யற்ற நிலையிலும், மாணவர்கள் பயன் படுத்தக்கூடிய கழிவறைகள் தூய்மைப் படுத்தப்படாமல் மிகவும் மோசமாக உள்ளன.  இதனால் மாணவர்களுக்கு நோய் தொற்று  பரவும் நிலையில் உள்ளதையும் கண்டறிந் தோம்.  இதுகுறித்து மாணவர்களிடம் கேட்ட போது, தூய்மைப் பணியாளர்கள் விடுதிக்கு  சரியான நேரத்திற்கு வருவதில்லை. அது  மட்டுமில்லாமல், விடுதியில் இருக்கக்கூடிய  கழிவறைகள் மற்றும் விடுதியை தூய்மை யாக வைத்துக் கொள்ளமாட்டார்கள் என  மாணவர்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு களை வைத்தனர்.  விடுதிக்கு சரியான நேரத்தில் வராமலும்  விடுதியில் இருக்கக்கூடிய கழிவறை மற்றும்  விடுதியை தூய்மையாக வைத்துக் கொள்ளா மல் இருக்கும் விடுதி தூய்மைப் பணி யாளர் மற்றும் விடுதி காப்பாளர் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழங்கக் கூடிய சம்பளத்தை ஏற்றுக் கொண்டு, தன்  பணியை சரியாக செய்யாமல் இருக்கும் பிற்படுத்தப்பட்ட நல விடுதியின் பணியாளர்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது மாவட்ட துணைச் செயலாளர் ஹரி  பிரசாத், மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்ரீகாந்த்,  விடுதி கிளை துணை பொறுப்பாளர் திருமால், அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.