districts

தனியார் நிறுவன பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை!

கும்பகோணம். டிச.23- தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம், தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாமிநாதன், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்கம் மேலாளர் இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கை மனுவை அளித்தனர்.  இதில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாது காப்பு நல சங்கத் தலைவர் சுகுமார், செயலாளர் சேகர் தனியார் நிறுவனங்களில் பணி நியமனத்தில் மாற்றுத்திற னாளிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மாற்றுத்திற னாளிகளுக்கு தமிழக அரசு வழங்கி வரும் உதவித் தொகையை 10ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வைத்திட வேண்டும் வெளியூர் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் அரசு ஆணைப்படி எண்ணிக்கை உச்ச வரம்பின்றி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதற்கு உத்தர வாதம் அளிக்க வேண்டும், பேருந்துகளில் பார்வை யற்றோர் மாற்றுத் திறனாளிகள் தங்களது வியாபாரப் பொருட்கள் எடுத்துச் செல்லும் லக்கேஜ் பைகளுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை மரணத்திற்கு வழங்கப்படும் இறப்பு நிதியிலிருந்து மரணமடைந்த அன்றே முன்பணமாக 2000 வழங்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு கும்ப கோணம் கோட்டாட்சியர் லதாவிடம் அளிக்கப்பட்டது.

;