நாகர்கோவில், ஏப்.28-
கன்னியாகுமரி மாவட் டம் நாகர்கோவில் பார்வதி புரம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (22), இவர் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப் பட்டார். குறுகிய காலத்தில் வெளியே வந்தவர் மீண்டும் தனது பாலியல் வக்கிரத்தை யும் இதர சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ‘ரோமியோ வாக’ வலம் வந்தவர் ரவுடி யாகவும் தனது ஆதிக் கத்தை தொடர்ந்தார்.
இந்நிலையில் அண்மை யில் பள்ளி மாணவி ஒருவரை கடத்திச் சென்று 2 நாட்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்து பாலியல் வல்லு றவு கொண்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற் றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை. ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் சிறுமியிடம் சிறார் பாது காப்பு குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனா லும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை.
காவல்துறையின் மெத்தனத்தை கண்டித்தும், பெண்கள் சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வலி யுறுத்தியும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்க வலி யுறுத்தியும் பார்வதிபுரம் சந்திப்பில் சிபிஎம் இராஜாக் கமங்கலம் ஒன்றியக்குழு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஏப். 28 வெள்ளியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
சிபி எம் மாவட்டக்குழு உறுப்பினரும், மாதர் சங்க மாவட்ட செயலாளருமான ரெகுபதி தலைமை தாங்கி னார். சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஆர். லீமாரோஸ், ஒன்றிய செயலாளர் எஸ். டி. ராஜ்குமார், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் அகமது உசைன், என். எஸ். கண் ணன், எஸ்.அந்தோணி, மாதர் சங்க மாநில இணை செயலாளர் என். உஷாபாசி ஆகியோர் பேசினர்.