தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம், விளாத்தி குளம் தாலுகா, புதூர் ஒன்றியத்திற்கு அடுத்துள்ளது சிவலார்பட்டி கிராமம். இங்குள்ள தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகேசன்மகன்கள் மகேஸ்வரன் (12), அருண் குமார் (9) மற்றும் கார்த்திகேயன் மகன் சுதன் (7) ஆகி யோர் வெள்ளிக் கிழமை மாலை சிவலார்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத வித மாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த சிறு வர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்க லையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.