districts

img

திருவாலங்காடு வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

மயிலாடுதுறை, ஆக.26 - மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம், திருவாலங்காடு கிராமத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சென்று, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண உதவித்தொகை தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். குத்தாலம் வட்டம் திருவாலங்காடு கிராமத்தில் எதிர்பாராதவிதமாக வெடி உற்பத்தி மையத்தில் வெடி விபத்து ஏற்பட்டதில், திருவாவடுதுறை கிராமத்தைச் சேர்ந்த கர்ணன், திருவாலங்காடு கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவித்தொகையும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதையடுத்து, நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.