அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு திருச்சிராப்பள்ளி, செப்.2 - தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆய்வக உதவியாளருக்கான பயிற்சி சான்றிதழ் மற்றும் பயிற்சி கட்ட கம் வெளியீட்டு விழா திருச்சி தேசிய கல்லூரி பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை யில் திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையிலுள்ள ஆய்வக உதவியாளர் பணியிடத்தில் பணிபுரி யும் 4786 ஆய்வக உதவியாளர் களுக்கு ஏப்ரல் மற்றும் மே 2024 இல் பணியிடை பயிற்சி நடைபெற்றது. இதில் பயிற்சி பெற்ற 3020 ஆய்வக உதவியாளர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆய்வக உதவியா ளர்களுக்கான பயிற்சி சான்றிதழ் வழங்கி பயிற்சி கட்டகத்தை வெளி யிட்டு சிறப்புரையாற்றினார். பயிற்சி விளக்க உரையை இயக்கு நர் முனைவர் அமுதவள்ளி வழங்கி னார். நிகழ்வில் பள்ளி கல்வி இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) முனைவர் பழனிச் சாமி, பள்ளிக்கல்வித்துறை அரசு செய லாளர் மதுமதி, தொழில் கல்வித்துறை இணை இயக்குநர் முனைவர் ஜெயக் குமார், திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுகானந்தம், தஞ்சா வூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் இரா.மதன்குமார், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.புண்ணியகோட்டி மற்றும் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் முருகாம்பாள் மற்றும் தமிழகம் முழு வதும் இருந்து ஆய்வக உதவி யாளர்கள் 2000-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: ஒருங்கிணைந்த கல்வி மூலமாக ஒன்றிய அரசு நிதி வழங்கிக் கொண்டி ருக்கிறது. இந்த வருடம் ரூ.2153 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்டவை பாதிக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒன்றிய அமைச்சரை இரண்டு முறை சந்தித்து கருத்துகளை தெரி வித்தோம். இதுகுறித்து பார்த்து சொல் கிறோம் என கூறினார். மீண்டும் நாடாளு மன்றத் தேர்தல் முடிந்த பின்பு சந்தித்து, நிதி வரவில்லை எனக் கூறினோம். நீங்கள் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டால், அரை மணிநேரத் தில் நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார். நாங்கள் 3, 5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, மும்மொழி கொள்கை, குலக் கல்வி திட்டத்தை மறைமுகமாக கொண்டுவருவது உள்ளிட்ட பாத கங்கள் குறித்து கூறியும், நீங்கள் யோ சித்துக் கூறுங்கள் என சொல்லிவிட்டார். இதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவர் என்ன கூறுகிறாரோ, அதை சார்ந்து எங்கள் நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார். ஆளுநர் மாநில பாடத் திட்டம் குறித்து பேசிய கேள்விக்கு, “பள்ளி நூலகங்களில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்காக 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாநில பாடப் புத்தகத்தில் இருந்துதான் படிக்கின்ற னர். யுபிஎஸ்சி முதற்கொண்டு மாநில பாடப் புத்தகத்தில் தான் படிக்கின்ற னர். வேண்டுமென்றால் ஆளுநரை அழைத்துக் கொண்டு போகிறேன். அங்கு போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் அவர் கேள்வி கேட்கட் டும்” என்றார்.