திருச்சிராப்பள்ளி, ஜூலை 17- தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2,500-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதற் கட்டமாக அதில் 986 மருந் தாளுநர் பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் 2022 இல் அறிவிப்பானை வெளியிட்டது. இதற்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் விண்ணப்பித்தனர்.
2023 ஏப்ரல் மாதம் தமிழ கம் முழுவதும் நான்கு கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்றன. தேர்வு முடிவு கள் வெளியிடப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நவம்பரில் முடிந்துவிட்டது. ஆனால், 10 மாதங்கள் ஆகி யும் தேர்வு செய்யப்பட்ட 986 பேருக்கு பணிநிய மன ஆணை வழங்கப்பட வில்லை. எனவே, அவர் களுக்கு விரைவாக பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்.
அரசு மருத்துவமனை களில் காலியாகவுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங் களை நிரப்ப வேண்டும் என்று இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்கம் (தமி ழக கிளை) நிர்வாகிகள் சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்த னர்.
இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறுகையில், “தமிழக அரசு மருத்துவ மனைகளில் ஒன்றிய அர சின் சில திட்டங்களில் தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் மருந்தாளுநர்களும் தேர் வில் பங்கேற்றனர். கொரோனா காலத்தில் பணி யாற்றியதற்காக அவர் களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தங்களை பணி நிரந்தரம் செய்த பிறகு, 986 மருந்தா ளுநர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதனால், தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துள்ள வர்கள் கவலை அடைந்துள் ளனர். அரசு உடனடியாக இதில் தலையிட்டு பணி நிய மன ஆணைகளை வழங்க வேண்டும்” என்றனர்.