திருச்சிராப்பள்ளி, பிப்.12 - சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதனன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமைப் பணி தொழிலாளர்களுக்கு சிறப்புச் சட்டம் உருவாக்க வேண்டும். சரக்கு பரிவர்த்தனை மதிப்பில் 2 சத வீதம் தொழிலாளர் நிதியை உருவாக்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர் களுக்கு தனியான நல வாரியம் அமைக்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் மற்றும் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்ப டும் அடுக்குமாடி குடியிருப்பில் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு முன்னு ரிமை அடிப்படையில் குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். உள்ளூர் தொழிலாளர்கள் செய்து வருகிற சுமைப்பணி வேலையை வெளி மாநில தொழிலாளர்களை கொண்டு குறைந்த தினக்கூலி கொடுத்து, உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசு குடோன், தனியார் குடோன்கள், லாரி டிரான்ஸ் போர்ட்கள், டாஸ்மாக் குடோன்களில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலா ளர்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எப், போனஸ், அடையாள அட்டை வழங்க வேண்டும். 4 மாதமாக வேலை மறுக்கப்பட்டுள்ள 42 வேஸ்ட் பேப்பர் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். ஐஎல்ஓ உத்தரவுபடி 100 கிலோ மூட்டை சுமக்க வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் பேசினர். சுமைப்பணி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.