districts

img

திருச்சி முக்கிய செய்திகள்

பொறுப்பேற்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியராக சென்னை வணிகவரி அலுவலக இணை இயக்குநராக பணியாற்றிய ரத்தினசாமி நியமிக்கப்பட்டார். இதற்கு முன் அரியலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஆனிமேரி ஸ்வர்ணா சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

விபத்தில் சிக்கிய ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ-வின் கார் 

மயிலாடுதுறை, ஜூலை 19 -  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள என்.என்.சாவ டியில் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகே யனின் கார் மோதி விபத்து ஏற்பட்டது.  ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகே யன் புதனன்று காரைக்கால் சென்று விட்டு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வழியாக காரில் சென்றுள்ளார்.

 என்.என் சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று  கொண்டிருக்கும் போது காழியப்பநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலக சாலையில் எருக்கட்டாஞ்சேரியைச் சேர்ந்த கொத்தனார் மணிகண்டன் (18), 12 ஆம் வகுப்பு மாணவர் செல்வகுமார்(16) ஆகிய இருவர் இருசக்கர  வாகனத்தில் காழியப்பநல்லூர் ஊராட்சிமன்ற அலுவலகம் உள்ள சாலையில் இருந்து,  தேசிய நெடுஞ்சாலையில் ஏறி திரும்பியதாக கூறப்படுகிறது.  அப்போது அதிவேகமாக வந்த வசந்தம் கார்த்திகேயனின் கார், இந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பிய போது, இருசக்கர வாகனத்தின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து, கார்த்தி என்பவரின் வீட்டின்மீது கார் மோதி போர்டிகோவில் புகுந்தது.  போர்டிகோ பகுதி மற்றும் வீட்டில் நிறுத்தியிருந்த கார், இரு சக்கர வாகனம் சேதமடைந்தது.   இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த மணிகண்ட னுக்கு கால் மற்றும் உடலில் காயமும், செல்வகுமாருக்கு வலது முழங்கா லுக்கு கீழ் எலும்புமுறிவும் ஏற்பட்டது.

அப்போது அவ்வழியாக வந்த  மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தான் வந்த அரசு வாக னத்தில் இருவரையும் மீட்டு பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு இருவரும் நாகை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினார்.  இந்த விபத்து தொடர்பாக கார் மோதியதில் சேதமடைந்த வீட்டின்  உரிமையாளர் கார்த்தி, பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின் பேரில் போலீசார் இருசக்கர வாகனத்தை அஜாக்கிர தையாக ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியதாக மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி அடையாள அட்டை பெற நடவடிக்கை தேவை

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி அடையாள அட்டை பெற நடவடிக்கை தேவை

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ. மேனகா, மாவட்டத் துணைச் செயலாளர் சி.ஏ.சந்திரபிரகாஷ், சேது பாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஏ. ராஜேஷ் கண்ணா, முன்னாள்  மாவட்ட துணைத் தலைவர் கே. கிருஷ்ணமூர்த்தி, மதுக்கூர் ஒன்றியத்  தலைவர் பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் மணி கண்டன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில், “மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாமில் திரளான மாற்றுத்திறனாளிகள், அவர் தம் உறவினர்கள் கலந்து கொள்கின்றனர். எங்கு பதிவு செய்வது, எப்படி பதிவு செய்வது, என்னென்ன ஆவணங்கள் தேவை, யாரை முதலில் சந்திப்பது என தெரியாமல் தவிக்கும் நிலை உள்ளது. எனவே அவர்கள்  அனைவரையும் முறைப்படுத்தி, சிரமமின்றி அடையாள அட்டை பெற்று  தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உதவித்தொகைக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திற னாளிகளுக்கு தாமதமின்றி உதவித்தொகை வழங்க வேண்டும். பட்டுக் கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் பெட்ரோல்  ஸ்கூட்டர் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு அவற்றை  உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி களுக்கு நூறு நாள் வேலை வழங்க வேண்டும். சட்டப்படி வேலை  நேரம் நிர்ணயித்து ஊதியம் வழங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

கண் விழித்திரை பரிசோதனை முகாம்

பாபநாசம், ஜூலை 19 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கு  கண் விழித்திரை பரிசோதனை நடந்தது. மருத்துவர் மரியபியூலா, கண்  மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ் ஆகியோர் 13 பேருக்கு பரிசோதனை  மேற்கொண்டனர்.  இதேபோன்று தொற்றா நோய் சிறப்பு மருத்துவ  முகாம் நடந்தது. இதில் 70 பேருக்கு மேல் ரத்த அழுத்தம்,  கொலஸ்ட்ரால், ரத்த சோகை,கிட்னியில் கிரியாட்டின், யூரியா உள்ளிட்ட  பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. இதில் வட்டார மருத்துவ அலுவலர்  தீபக், மருத்துவர்கள் கெளரிசங்கர், சண்முக வடிவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரேசன் கடை, நூலகம் அமைத்துத் தரப்படுமா?
காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு

தஞ்சாவூர், ஜூலை 19-  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூவாணம் கிராமத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைக் கூட்டம்  எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி,  விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வீ. கருப்பையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். 

இக்கூட்டத்தில், பூவாணம் ஊராட்சியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். நியாய  விலைக் கடை அமைத்து தர வேண்டும். மாண வர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகை யில் நூலகம் அமைத்து தர வேண்டும். நூறு நாள் வேலையைத் துவக்கி, அனைவருக்கும்  வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கை களை வலியுறுத்தி, ஊராட்சி மன்ற அலுவல கம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்து வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அழகியநாயகிபுரம் ஊராட்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைக் கூட்டம், கிளைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா  தலைமையில் நடைபெற்றது. இப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோருக்கு குடி மனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தும், இது வரை பட்டா வழங்கப்படவில்லை. விண்ணப் பித்த அனைவருக்கும் மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்பு  போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப் பட்டது.