மயிலாடுதுறை, ஏப்.12 - மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் விவசாயிகளிடமிருந்து கொள் முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மாதக்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் நெல் மூட்டைகள் (விவசாயிகளின் உழைப்பு) முற்றிலும் நனைந்து நாசமாகி வருவ தாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சம்பா சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்வதற்காக மயிலாடுதுறை மாவட் டத்தில் நீடுர், மணல்மேடு, மங்க நல்லூர், பெரம்பூர், இலுப்பூர், தில்லை யாடி, பொறையார், பரசலூர், மாமாக்குடி, மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும் பள்ளம், தலைச்சங்காடு, கீழையூர், மணக் குடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பகுதி களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழகம் சார்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட் டன. பெரும்பாலும் அனைத்து கொள் முதல் நிலையங்களிலும் கொள்முதல் முடிந்த நிலையில் நெல் மூட்டைகளை குடோன்களுக்கு ஏற்றிச் செல்ல லாரி கள் அனுப்பப்படாததால் ஒவ்வொரு மையங்களிலும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின் றன. இதனால் கடந்த ஓரிரு நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகிக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.சிம்சன் கூறுகையில், ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் தேவையான தார்ப்பாய்கள், சாக்கு பைகளை முறையாக வழங்காத அதிகாரிகள், போதுமான அளவு லாரி களையும் அனுப்பி வைக்கவில்லை. இதனால் விவசாயிகள்தான் பெருமள விற்கு பாதிக்கப்படுகின்றனர். தேவைப்படும் பகுதிகளுக்கு நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்த நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி கள் மையங்களுக்கு தேவையான வசதி களை செய்ய முன்வருவதில்லை என ஏற் கனவே விவசாயிகள் சங்கம் சார்பில் குற்றச்சாட்டை முன்வைத்தோம். ஆனால் அதையெல்லாம் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் நெல் மூட்டை கள் மழை பெய்யும் போதெல்லாம் நனைந்து நாசமாகி வருகிறது. மேலும் நிரந்தர கட்டிடங்கள் பெரும்பாலான மையங்களுக்கு இல்லாததால் குளத்துக் கரை, கோயில்கள், புறம்போக்கு இடங்களில்தான் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படு கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உடனடி யாக நடவடிக்கை எடுத்து ஒவ்வொரு மையங்களிலும் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல லாரிகளை அனுப்பி வைக்க வேண்டு மென கோரிக்கை விடுத்துள்ளார்.