districts

திருச்சி முக்கிய செய்திகள்

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி முயற்சி

புதுக்கோட்டை, ஜூலை 25 - புதுக்கோட்டையில் அரசுப் பணிகளுக்கு நிலம் எடுத்த தற்கு இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றப் பணியாளர்கள் புதன்கிழமை மாலை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் ஏழை  மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்காக ஆதிதிராவிடர்  நலத் துறையால் வேதம்பாள் ஆச்சி என்பவருக்குச் சொந்தமான 570 செண்டு நிலம் அரசால் கையகப்படுத் தப்பட்டது.

செண்டு ஒன்றுக்கு ரூ.115 என்ற அரசின் இழப்பீட்டை  உயர்த்தக் கோரி மாவட்ட முதன்மை சார்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் செண்டு ஒன்றுக்கு ரூ.2004 என்றும், உயர் நீதிமன்றத்தில் தொடரப் பட்ட மேல்முறையீட்டு வழக்கில் செண்டு ஒன்றுக்கு ரூ.  2400 எனக் கணக்கிட்டு இழப்பீடு வழங்கவும் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தம் ரூ.25,60,661-ஐ இழப்பீடாகவும் 15 சதவீத வட்டியையும் வழங்க வேண்டும் என நீதிமன்றம்  உத்தரவிட்டது. அதன்பிறகும், அரசால் இழப்பீடு வழங்கப் படாத நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் திலுள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய மாவட்ட  முதன்மை சார்பு நீதிமன்றம் கடந்த ஜூன் 15 அன்று உத்தர விட்டது.

இதைத் தொடர்ந்து நீதிமன்றப் பணியாளர்களும், பாதிக்கப்பட்டோர் தரப்பு வழக்குரைஞர் எஸ்.சீனி வாசன் உள்ளிட்டோரும் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்துக்கு புதன்கிழமை மாலை வந்தனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முரு கேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் அரசிட மிருந்து நிதியைப் பெற்று வழங்குவதாக உறுதியளிக் கப்பட்டதைத் தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை தற்காலிக மாக கைவிடப்பட்டது.

ஜூலை 30 போராட்டத்தை விளக்கி வாயிற்கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 25 - ஜூலை 30 அன்று சென்னையில் நடக்க உள்ள போராட்டத்தை விளக்கி வாயிற்கூட்டம் நடைபெற்றது.

பொது விநியோகத்தை பலப்படுத்தி, பொது விநியோ கத்தில் உள்ள குறைபாடுகளை அகற்ற வேண்டும். காலிப்  பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த  பருவ கால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.  பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி  சென்னையில் ஜூலை 30 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  நடைபெற உள்ளது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில்  கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் திருச்சி மண்டல அலுவ லகத்தில் நடைபெற்றது. மண்டலச் செயலாளர் வீ. தீனத யாளன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஏழு மலை, மாநிலச் செயலாளர் என்.ராசப்பன், சிஐடியு மாவட்டச்  செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். 

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா
கவிதை, குறும்படப் போட்டி முடிவுகள் அறிவிப்பு

புதுக்கோட்டை, ஜூலை 25 - புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 7ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி கல்லூரி மாண வர்களுக்காக நடத்தப்பட்ட கவிதை மற்றும் குறும்படப்  போட்டிகளில் வென்றோர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் பேரா.சா.விஸ்வநாதன் கூறுகையில், “குறும்படப் போட்டி யில் பெருமாநாடு, சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியின் 3  ஆம் ஆண்டு கணினி அறிவியல் மாணவர் எஸ்.யுவராஜ்  முதல் பரிசையும், கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை அறிவியல்  மகளிர் கல்லூரியின் மருத்துவ நிர்வாகவியல் மாணவி கள் தயாரித்த குறும்படம் இரண்டாம் பரிசையும், சிவ புரம், கற்பக விநாயகா செவிலியர் கல்லூரியின் 4ஆம்  ஆண்டு பிஎஸ்ஸி நர்ஸிங் மாணவி ஜி.காயத்ரி மூன்றாம்  பரிசையும் பெற்றுள்ளனர்.

கவிதைப் போட்டியில், சிவபுரம் ஜெஜெ கலை அறி வியல் கல்லூரியின் இரண்டாமாண்டு முதுகலை தாவரவி யல் மாணவி சி.ஹரிணி முதல் பரிசையும், சிவபுரம் கற்பக  விநாயகா செவிலியர் கல்லூரியின் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு மாணவி தி.லீலா இரண்டாம் பரிசையும், திருமயம்  அரசு கலை அறிவியல் கல்லூரியின் இளம் அறிவியல் இரண் டாமாண்டு கணித மாணவி அ.ஆரிஃபா மர்ஸியா மூன்றாம் பரிசையும் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான பரிசுகள் புத்தகத் திருவிழாவில் வழங்கப்படும். கவிதை போட்டியில் பங்கேற்ற கவிதை களில் இருந்து முதல் 10 கவிதைகளைத் தொகுத்து சிறு நூலாக புத்தகத் திருவிழாவில் வெளியிடப்படும்” என்றார்.

தீ விபத்தில் குடிசை எரிந்து நாசம்: பேராவூரணி எம்எல்ஏ ஆறுதல்

தஞ்சாவூர், ஜூலை 25 - பேராவூரணி அருகே தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள  களத்தூர் கிழக்கு ஊராட்சி, பாலக்கரை நாடார் தெரு வைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). கூலித்தொழிலாளி யான இவருக்கு மனைவி நீலாவதி மற்றும் பள்ளியில் படித்து வரும் இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ராஜேந்தி ரன் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்த போது, திடீ ரென மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பற்றி எரியத்  தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. 

இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் வியாழக்கிழமை களத்தூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

கலைஞரின் கனவு இல்லம் பயனாளிகளுக்கு பணி ஆணை

மயிலாடுதுறை, ஜூலை 24 - மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோவிலில் “கலைஞரின் கனவு  இல்லம்” திட்டத்தின்கீழ் 700 பயனாளி களுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது.

இந்த திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத் திற்கு மட்டும் 3 ஆயிரம் வீடுகளுக்கு ரூ.105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி செம்பனார்கோவில் ஒன்றியத்தில் 700 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, அதற் கான பணி ஆணை வழங்கும் விழா செம்ப னார்கோவிலில் நடைபெற்றது. பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முரு கன், பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான  பணி ஆணைகளை வழங்கி திமுக அரசின்  சாதனைகளை விளக்கி பேசினார்.

குளத்தின் நீர் வழிப்பாதை, வாய்க்கால்  கரை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

திருத்துறைப்பூண்டி, ஜூலை 26 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி வருவாய் கிராமத்தில் (சர்வே எண். 112,110/2) அரசுக்கு சொந்தமான சிவன் கோவில் குளம், அய்யனார் பிரடேஸ்வரர் கோவில் குளம் உள்ளது. 

இதன் நீர்வழிப் பாதைகளில் நீர் உள்வரத்து, நீர் வெளியேறும் பாதைகளிலும், வாய்க்கால் கரையிலும் முள்வேலி வைத்து தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இந்த நீர்நிலைகளை மக்கள் மற்றும் கால்நடைகள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நிலத்தடி நீரும் குறைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும் மழைக் காலங்களில் நீர் சேமிக்கப்படாமல் வீணாவதால், குளம் வறண்ட நிலையிலேயே கிடக்கிறது. தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான நீர்நிலை புறம்போக்குகளை ஆக்கிரமிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் ஆணையிட்டுள்ளன.  எனவே உடனடியாக நீர்நிலைகள் மற்றும் நீர் வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.