புதுக்கோட்டை, ஜூலை 12-
ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவையொட்டி கல்லூரி மாணவர்களுக் கான இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
இதுகுறித்து போட்டி ஒருங்கிணைப்பா ளர் பேரா.சா.விஸ்வநாதன் தெரிவித்தி ருப்பதாவது:
ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திரு விழா ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல் லூரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டி (15 வரிகளுக்குள்), பேச்சுப்போட்டி, குறும் படப் போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டிகள் 22.7.2023 அன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாமன்னர் கல் லூரியில் உள்ள கலையரங்கில் நடை பெறும். பங்கேற்கும் மாணவர்கள் அன்று காலை 9 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும்.
கவிதை, பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டி நடைபெறும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிக்கப் படும். குறும்படப் போட்டிக்கு, புத்தகம், புத் தக வாசிப்பு, அறிவுத் தேடல் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டு 5 நிமிட குறும்படம் தயாரித்து 94436 39397 என்ற வாட்ச்அப் எண்ணுக்கு 21.7.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
வெற்றி பெற்றவர்களுக்கு புத்தத் திரு விழாவில் நினைவுப் பரிசும், சான்றிதழும் சிறப்பு அழைப்பாளர்களால் வழங்கப் படும். ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
போட்டியில் கலந்து கொள்ளும் மாண வர்களின் பெயர்ப் பட்டியலை பேரா.சா. விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளர்/செய லர், வாசகர் பேரவை, எண்.32, எஸ்.எஸ். நகர், புதுக்கோட்டை 622 001. (கைப்பேசி: 94436 39397) என்ற முகவரிக்கு கல்லூரி நிர்வாகங்கள் அனுப்பி வைக்க வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.