அரியலூர், மே 11- ஜெயங்கொண்டம் நகர குடியிருப்பு பகுதியில், கோழிக்கு செலுத்தப்படும் காலாவதியான மருத்துவக் கழிவு களை, பொது வெளியில் தீயிட்டு கொளுத்தியதால் நோய் தொற்று பரவும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் விசாலாட்சி நகரில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் இரவு நேரத்தில் கோழிக்கு செலுத்தப்படும் காலாவதியான மருத்துவக் கழிவு களை பொதுவெளியில் கொட்டி சிலர் எரித்துள்ளனர். மருந்துகள் எரிந்த போது கிளம்பிய கரும் புகைமூட்டத்தால், இப்பகுதி முழு வதும் துர்நாற்றம் வீசியுள்ளது. இத னால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் நாற்றம் பொறுக்க முடி யாமல் அவதியுற்றனர். இதில் சில மருந்துகள் எரிந்த நிலையிலும், சில மருந்துகள் எரியாத நிலையிலும் கிடப்பதால், நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காலையிலும் இந்த புகை நாற்றம் தொடர்வதால், அப்பகுதியில் குடியிருக்கும் பொது மக்கள் வெளியில் சென்று வர சிரமம் ஏற்படுகிறது. விசாலாட்சி நகர் பகுதியில், ஜெயங் கொண்டம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் கோழிக்கு செலுத்தப்படும் ஊசி, மருந்து உப கரணங்களை விற்பனை செய்யும் அலுவலகம் உள்ளது. இவர்கள் காலா வதியான மருந்துகளையும், மருத்துவக் கழிவுகளையும், பொதுவெளியில் போட்டு தொடர்ந்து எரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். மருத்துவத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மருத்து வக் கழிவுகளை எரிக்காமல் இதற்கென்று உள்ள ஏஜென்சிகளிடம் கொடுக்க உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மருத்துவக் கழிவுகளை எரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.