தஞ்சாவூர், நவ.24- மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பாழடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தி உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மல்லிப்பட்டினம் கடற்கரை கிரா மத்தில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இந்த மீன்பிடித் துறைமுகம் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.65 கோடியில் நவீனப் படுத்தப்பட்டது. மல்லிப்பட்டினம், கள்ளி வயல் தோட்டம் என 2 மீன்பிடி இறங்கு தளங்களும், வலை பின்னும் கூடம், வலைகளை உலர வைக்கும் இடம், ஓய்வி டம், மீன் விற்பனை ஏலக்கூடம், மீன்வளத் துறை அலுவலகம் என மல்லிப்பட்டினம் துறைமுகம் பிரம்மாண்டமாக அமைந்து உள்ளது. இதன் அருகிலேயே, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், கிழக்கு கடற்கரை மனோரா சுற்றுலாத்தலம் உள்ளது. இப்பகுதி மக்கள் மனோரா சுற்றுலாத் தலத்திற்கு செல்வதையும், மல்லிப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்திற்குச் சென்று பார்ப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். மேலும், மீன்பிடி இறங்குதளத்திற்கு மீன்கள் வாங்குவதற்காகவும், விற்பனை செய்வதற்காகவும் மீனவர்கள் மற்றும் வியா பாரிகள், பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலக புதிய கட்டிடம் அருகே, கைவிடப் பட்ட நிலையில் பழைய மீன்வள ஆய்வா ளர் அலுவலகக் கட்டிடமும், அதன் அருகி லேயே பொருள் வைப்பறையும் உள்ளது. இந்த இரண்டு கட்டிடங்களும் பழுதடைந்த நிலையில், ஜன்னல், வாசல் கதவுகள் இன்றி திறந்து கிடக்கிறது. மரம், செடிகள் வேர்விட்டு முளைத்து எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த இரு பாழடைந்த கட்டிடத்திற்கு இடையே மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு எரிபொருள் பிடிக்கும் எரிபொருள் நிலைய மும் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் உள்ள ஆபத்தான இரண்டு கட்டி டங்களால் பொதுமக்கள், மீனவர்கள், வியா பாரிகள் உயிருக்கு அச்சுறுத்தலான நிலை உள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி, ஆபத்தான நிலையில் உள்ள இந்த இரண்டு கட்டி டங்களையும் பாதுகாப்பு கருதி உடனடியாக இடித்து அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் முன் வர வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.