மயிலாடுதுறை, செப்.5- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், ஆக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் ஞானவேலன், ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரமோகன், திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆக்கூர் பள்ளி தலைமையாசிரியர் திருஞானசம்பந்தம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு ஆக்கூர் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் 152 பேருக்கும், ஓரி யண்டல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 52 பேருக்கும், திருக்கடை யூர் அரசு பள்ளி மாணவர்கள் 71 பேருக்கும் என மொத்தம் 275 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குமார், ஆக்கூர் ஓரியண்டல் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஷாஜகான், தாளாளர் இக்ராம் ரசூல், திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அமுர்த விஜயகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் சிங்காரவேலு, சரவணன், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் தமிழழகன் நன்றி கூறினார்.