புதுக்கோட்டை, பிப்.12 - புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், ரெகுநாதபுரம் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமையில் புதனன்று நடைபெற்றது. இம்முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்டக்கலை - மலைப் பயிர்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறை களின் சார்பில் 341 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்தில் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் அருணா உரையாற்றினார். முகாமில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத் துரை, மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) முருகேசன், கறம்பக் குடி வட்டாட்சியர் ஜபருல்லா, வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வன், அட்மா கமிட்டி தலைவர் வி.முத்து கிருஷ்ணன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் அரியலூர் மாவட்டம், ஜெயங் கொண்டம் அருகேயுள்ள பெரிய வளையம் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் புதன்கிழமை மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை வகித்த ஆட்சியர் பொ.ரத்தினசாமி, அனைத்து துறைகள் சார்பில் 65 பயனாளி களுக்கு ரூ.55,47,203 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடமிருந்து 81 கோரிக்கை மனுக்கள் பெற்றார். முன்னதாக அவர் அங்கு அனைத்து துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்த துறை சார்ந்த திட்டங் கள் குறித்த கண்காட்சியை பார்வை யிட்டார். முகாமிற்கு ஜெயங்கொண் டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் பெரம்பலூர் வட்டம், புது நடுவ லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத் தில் பல்வேறு துறைகளின் சார்பில் 192 பயனாளிகளுக்கு ரூ.1,23,02,756 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, பொது மக்களிடம் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.