districts

img

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி செந்துறையில் உற்பத்தியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூர், நவ.19 - அரியலூர் மாவட்டம் செந்துறை கடை வீதியில் பால் கொள்முதல் விலையை உயர்த்திடவும் ஊக்கத்தொகை, போனஸ் வழங்க கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் கொளஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் சிறப்புரையாற்றினார். செந்துறை  வட்டச் செயலாளர் கு.அர்ச்சுனன், விவ சாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டத் தலைவர்  பாலசிங்கம், உழவர் மன்ற தலைவர் முத்து பரமசிவம், பரணம் விவசாய சங்கப் பிரதிநிதி  தா.ஆசைத்தம்பி, கை நெசவுத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பிஅழகுதுரை, மாவட்டக் குழு இ.பன்னீர்செல்வம், ஆர்.இள வரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 என உயர்த்தியும், பசும்பால் ரூ. 45, எருமை பால் லிட்ட ருக்கு ரூ.54 என நிர்ணயம் செய்ய வேண்டும்.  பாலுக்கான ஊக்கத்தொகை இதர மாநிலங் களில் வழங்குவது போல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 5 தமிழக அரசு வழங்கிட வேண்டும். தமி ழகத்தில் ஆவினுக்கு சொந்தமான தீவன ஆலைகளை முழுமையாக இயக்கி, பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானிய விலையில் மாட்டுத் தீவனம் வழங்க வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு விலை  அறிவிப்பதை போல் ஒவ்வொரு ஆண்டும் பாலுக்கு விலையை அறிவிக்க வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பாலை யும் பால் சார்ந்த பொருட்களையும் வழங்கிட  வேண்டும்.  ஆவின் கொள்முதலை தினசரி ஒரு கோடி லிட்டராக உயர்த்தவும், அதற்கான கட்டு மானத்தை உருவாக்கிடவும் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தினர்.