பொன்னமராவதி, அக்.7 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் சடையம்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை வழங்கினார். கண்டியாநத்தம் ஊராட்சி க.புதுப்பட்டி விளக்கில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு உள்ள பேருந்து நிழற்குடை, மயிலாப்பூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றையும் அமைச்சர் திறந்து வைத்தார். அறிமுக நிகழ்ச்சி பாபநாசம், அக்.7 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர்.டி.பி. கல்வியி யல் கல்லூரியில் முதலாமாண்டு பி.எட். மற்றும் எம்.எட் மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜாராம் வர வேற்றார். ஆர்.டி.பி. கல்வி குழும தலைமை செயல் அலு வலர் முனைவர் பஸலூர் ரஹ்மான் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கல்வியாளர் முனைவர் பெரிய சாமி பங்கேற்று உரையாற்றினார். துணைப் பேராசிரியர் மணிகண்டண் நன்றி கூறினார்.