districts

திருச்சி முக்கிய செய்திகள்

பொன்னமராவதி சிபிஎம் கிளை மாநாடுகள்

பொன்னமராவதி, செப்.20 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கிளை மாநா டுகள் நடைபெற்றன.  இதில் புதிய செய லாளர்களாக பொன்னம ராவதி பாண்டியம்மாள் கோவில் தெரு-கண் ணன், கட்டையாண்டி பட்டி-பழனியப்பன், அண்ணா நகர்-நாக ராசு, இந்திரா நகர்-அனிபா என்ற அய்யா துரை, காமராஜர் நகர்- எம்.ராமசாமி, உடையாம் பட்டி-குமார், கீரங்குடி-தியாகராஜன், ஒலிய மங்கலம்- சிவசுப்பிரமணி யன், பனையபட்டி-ரஜினி, கங்கானிபட்டி- கமலம் ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர்.

தேசிய மக்கள் நீதிமன்றம்

பாபநாசம்,  செப்.20 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் மாவட்ட உரி மையியல் மற்றும் நீதித்  துறை நடுவர் நீதி மன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. தேசிய மக்கள் நீதி மன்றத்திற்கு நீதிபதி அப்துல்கனி தலைமை வகித்தார். இதில் 330 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.8.31 லட்சம் வசூலானது. இதில்  மக்கள் நீதிமன்ற உறுப்பி னர் பாக்யராஜ், சட்ட  உதவி மைய தன்னார்வ லர் கிரிஜா, வழக்கறி ஞர்கள், நீதிமன்ற ஊழி யர்கள் பங்கேற்றனர்.

கிடேறி கன்றுகளுக்கு தடுப்பூசி முகாம்

பாபநாசம், செப்.20 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தலின் பேரில், 4 முதல் 8 மாத கிடேறி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் நான் காம் கட்ட தடுப்பூசி முகாம் மெலட்டூர் அருகே  கொத்தங்குடி ஊராட்சி,  எடக்குடியில் நடந்தது.  கால்நடை நோய் புல னாய்வு பிரிவு, தஞ்சாவூர் உதவி இயக்குநர் தெய்வவிருத்தம், கால் நடை பராமரிப்புத் துறை  கும்பகோணம், ஊராட்சித்  தலைவர் பழனி முன்னி லையில் இம்முகாம் நடந்தது. இதில் புண்ணி யநல்லூர் கால்நடை மருந்தக உதவி மருத்து வர் ரகுநாத், ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் கிராம மக்கள் பங்கேற்ற னர்.

கிராம நிர்வாக அலுவலர்கள்  ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, செப்.20 - டிஜிட்டல் சர்வே திட்டத்தில் உள்ள குறை பாடுகளை கலையக் கோரி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டாட்சியர் அலு வலக வளாகத்தில் தமிழ் நாடு கிராம அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், அறந்தாங்கி கோட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.செந்தில் குமார் தலைமை வகித் தார். அறந்தாங்கி கோட் டத்தில் பணியாற்றும் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த ஏறத்தாழ 40  கிராம நிர்வாக அலுவ லர்கள் பங்கேற்றனர்.

இலுப்பூரில் இஸ்லாமிய பெண் மர்மச் சாவு:  14 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை

மயிலாடுதுறை, செப்.20 - இலுப்பூர் கிராமத்தில் இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலை யில், 14 பவுன் நகைகள் மற்றும் ரொக்கப் பணம் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், இலுப்பூர் கிராமத்தில் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பஜில் முகமது  (64). இவரது மனைவி மர்ஜானாபேகம் (56).  இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முதல் மகன் மகதீர் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இரண்டாவது மகன் அகமது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மூன்றாவது மகன் முகமது அஜ்மல் சென்னையில் உயர்கல்வி பயின்று  வருகிறார்.  இந்நிலையில் பஜில் முகமது தனது சொந்த வேலையாக மயிலாடுதுறைக்கு சென்று விட்டு, மாலை வீடு திரும்பி யுள்ளார். அப்போது வீட்டின் உள்ளே சென்று  பார்த்தபோது மனைவி மர்ஜானா பேகம் மர்ம மான முறையில் இறந்து கிடந்துள்ளார். அரு கில் இருந்த மருத்துவரை அழைத்து வந்து பார்த்தபோது, இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே மர்ஜானா பேகம் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பஜில் முகமது பொறை யார் காவல் நிலையத்திற்கு புகார் அளித்து உள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ  இடத்திற்கு வந்த சீர்காழி காவல் துணை கண் காணிப்பாளர் ராஜ்குமார், பொறையார் காவல் ஆய்வாளர் ஜெயந்தி விசாரணை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பஜில் முகமது, தனது மனைவி அணிந்திருந்த 14 பவுன் நகைகள் மற்றும் பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு போயுள்ளதாக தெரி வித்துள்ளார். இச்சம்பவம் குறித்து மயிலாடு துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் வந்து விசாரணை மேற் கொண்டார். தொடர்ந்து நாகையிலிருந்து கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்  வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப் பட்டது. மர்ஜானா பேகத்தின் உடல் கூறாய்வுக் காக மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அரசுப் பள்ளிக்கு மேசை, நாற்காலி  வழங்கிய பாபநாசம் எம்எல்ஏ

பாபநாசம், செப்.20 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே இலுப்பக் கோரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பாபநாசம் எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.4.67 லட்சத்தில் மேசை,  நாற்காலி உள்ளிட்ட தளவாடப் பொருட்களை ஜவா ஹிருல்லா எம்எல்ஏ வழங்கிப் பேசினார். மேலும், பள்ளிக்கு நுழைவாயில் மற்றும் கதவு அமைக்க  ரூ.3 லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யில் பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தலைவி  சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி தலைமை யாசிரியர், ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்ட னர்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4.40 கோடி கடனுதவி

தஞ்சாவூர், செப். 20 -  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக  வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், சேதுபாவாசத்தி ரம் ஒன்றியத்தைச் சேர்ந்த, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு  வங்கிக் கடன் இணைப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பேராவூரணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமை வகித்தார்.  உதவித் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஏ.மார்ட்டின் வர வேற்றுப் பேசினார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 31 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 562 மகளிருக்கு ரூ.4 கோடியே 40 லட்சத்து 83 ஆயிரம் கடன் உதவிகளை வழங்கி  சிறப்புரையாற்றினார். 

பெண்ணிடம் தவறாக  நடக்க முயன்றவர் கைது

தஞ்சாவூர், செப். 20 - தஞ்சாவூர் மாவட்டம், ஆம்பலாப்பட்டு தெற்கு, பரங்கி வெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வினோத். கூலித் தொழிலாளியான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாப்பாநாடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (48)  என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு கடனாக பெற்று உள்ளார். கடந்த நான்கு மாதங்களாக வட்டி பணத்தை வினோத் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு, வினோத் மனைவி ஜூலி யர் வளர்மதி (24), மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது, செந்தில்குமார் வட்டிப் பணத்தை கேட்டுச் சென்றார். அப்போது, ஜூலியர் வளர்மதி தன்னிடம் 5 ஆயிரம் ரூபாய்  தான் உள்ளது. மீதி பணத்தை கொஞ்ச நாளில் கொடுத்து  விடுகிறேன் எனக் கூறி 5 ஆயிரம் ரூபாயை செந்தில்குமாரி டம் கொடுத்துள்ளார். இருப்பினும் செந்தில்குமார், ஜூலியர் வளர்மதியிடம் பாலியல் ரீதியாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். மேலும்,  வட்டி பணம் 5 ஆயிரம் ரூபாயில், 2,500 ரூபாயை செலவுக்கு  வைத்துக்கொள் என ஜூலியர் வளர்மதியிடம் கொடுத்தாக கூறப்படுகிறது.  ஆனால், செந்தில்குமார் கொடுத்த பணத்தை  வாங்க மறுத்தார் ஜூலியர் வளர்மதி. பிறகு, வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த தனது கணவரிடம், நடந்த சம்பவம்  குறித்து ஜூலியர் வளர்மதி கூறி அழுதுள்ளார்.  இது தொடர்பாக பாப்பாநாடு காவல்நிலையத்தில் ஜூலி யர் வளர்மதி வியாழக்கிழமை புகார் அளித்தார். இது தொடர் பாக செந்தில்குமாரை அழைத்து காவல்துறையினர் விசாரணை  நடத்தினர். இதில், ஜூலியர் வளர்மதியிடம் தவறாக நடக்க  முயன்றது உறுதியானது. இதையடுத்து செந்தில்குமார் மீது  கந்துவட்டி, பெண்ணை மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.20 - பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூ திய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.  சிறப்பு காலமுறை ஊதியத்தில் 41 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம  உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் அத்துக்கூலி முறையில் ஊர்ப்புற  நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப் பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும்  மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். 4.8 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படை யில் உடனடியாக நிரப்பிட வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற  நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி வருவாய் துறை சங்க மாவட்டச்  செயலாளர் மாடசாமி, அரசு ஐடிஐ சங்க மாநிலச் செயலாளர்  நவநீதன் ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பெரியசாமி நிறைவுரையாற்றினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு  ஊழியர் சங்க பேராவூரணி வட்டத் தலைவர் நாவலரசன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ஸ்ரீ மகேஷ், சங்க வட்டச் செயலாளர் ரமேஷ், சத்துணவு ஊழியர் சங்க சேதுபாவாசத்திரம் தலைவர் ராஜேஸ்வரி, அரசு ஊழியர் சங்க முன்னாள் வட்டச் செய லாளர் ராஜசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்திப் பேசினர்.   கரூர் கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், க.பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூர், கரூர், தோகைமலை, புகளூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  அந்தந்த வட்டாரத் தலை வர்கள் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் பொன்.ஜெயராம், மாவட்டத் தலை வர் எம்.எஸ்.அன்பழகன், மாநில துணைத் தலைவர் எம். செல்வராணி, மாவட்ட பொருளாளர் எம்.பாலசுப்பிர மணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்‌‌.

லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாய் வழங்க வேண்டும்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தல் 

அரியலூர், செப்.20 - தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க பேரவை அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தில் சங்கத் தலைவர் மகாதேவன் தலைமையில் நடைபெற்றது.  இதில் மாநிலத் தலைவர் முகமதுஅலி கலந்து கொண்டு, பால் உற்பத்தி, கொள்முதல், பால் தீவனங்கள், பராமரிப்பு உள்ளிட்டவை பற்றி சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்டத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாஜலம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன், ஒன்றியச் செயலாளர் டி.தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.  கூட்டுறவு பால் சங்க நிர்வாகம் உற்பத்தியாளர்களின் போராட்டத்தின் போது ஏற்றுக் கொண்ட உத்தரவாதத்தை அமல்படுத்தாமல் உள்ளதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பால் பணம் பட்டுவாடாவை தாமதிக்காமல் மாதம் இருமுறை வழங்க வேண்டும். ஊக்கத்தொகை லிட்டருக்கு மூன்று ரூபாயை உடனே வழங்க வேண்டும். பசுமாட்டு பால் தீவனங்களை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் அளவை ஒவ்வொரு மாதமும் பால் அட்டைகளில் குறித்து கொடுக்க வேண்டும். சங்க நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களை தரக்குறைவாக பேசுவதை தடுக்க வேண்டும். அரசு அறிவித்த லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாய்க்கு குறையாமல் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை ஏற்பு
மயிலாடுதுறை-சேலம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கும்பகோணம், செப்.20 - கும்பகோணம் - தஞ்சை வழியாக இயக்கப்படும், மயிலாடுதுறை-சேலம் விரைவு ரயிலில் பயணிகளின் வசதிக் காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட  வேண்டும் என கும்பகோணம் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்டக் கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக ‘தீக்கதிர்’ நாளித ழில் செய்தி வெளியானது. இந்நிலை யில் மயிலாடுதுறை-சேலம் விரைவு  ரயில் கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என தென்னக ரயில்வே துறை அறி வித்துள்ளது. தஞ்சை - கும்பகோணம் - மயிலாடு துறை ரயில்வே வழித்தடத்தில் சென்னை, திருப்பதி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகை யில் மயிலாடுதுறை - திருச்சி, திருச்சி -  கரூர், கரூர் - சேலம் ஆகிய 3 ரயில்கள்  தினமும் இயக்கப்பட்டு வந்தன. அதன் பின்னர் அந்த 3 ரயில்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு மயிலாடுதுறை - சேலம் நேரடி ரயிலாக 2023 ஆகஸ்ட் முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் 12 சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் இயங்கி வந்தது. மயிலாடுதுறையிலிருந்து சேலத்திற்கு நேரடி ரயிலாக இயக்கப்பட் டதால், இந்த ரயிலுக்கு சிறப்பான வர வேற்பு இருந்தது. இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ரயிலில் கூட்டம் அதிகமாக காணப் பட்டது. ரயிலில் ஏற்படும் நெரிசலால், நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணி களுக்கு சிரமம் இருந்தது.  இந்நிலையில் மயிலாடுதுறை - சேலம் ரயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 8 பெட்டிகள் கொண்ட மெமு ரயிலாக மாற்றப்பட்டது. குறைந்த பெட்டியில் அதிகளவில் கூட்டம் இருந்த தால் போதிய இருக்கை வசதி, கழிவறை வசதி இல்லை. இதனால் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என தென்னக ரயில்வே உப யோகிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு  அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் திருச்சி கோட்ட ரயில்வே துறையிடம் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து மயிலாடு துறை-சேலம் ரயிலில் கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு 12  பெட்டிகளோடு அக்டோபர் 2 முதல் இந்த ரயில் இயக்கப்படும் என  அறி விக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட ரயில் உப யோகிப்பாளர் சங்கத்தினர் மற்றும்  பயணிகள் தென்னக ரயில்வே அதிகாரி களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் மயிலாடுதுறை - திருச்சி இடையே இரு மார்க்கத்திலும் 16833,  16834 இயக்கப்படும் மெமு விரைவு ரயில் கூடுதல் பெட்டிகளை இணைக்க  வேண்டும் என்றும் ரயில்வே துறைக்கு  கோரிக்கை விடுத்துள்ளது.